ஈசிஆர் வீடியோ.. சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது: அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஈசிஆர் சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும் கூட தினமும் ஒரு உதாரணங்கள் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை ஈசிஆர் சாலையில் காரில் பெண்கள் இரவு நேரத்தில் சென்று கொண்டிருக்கும்போது அந்த காரை இடைமறித்து நிறுத்தி அவர்களிடம் இளைஞர்கள் அத்துமீறும் வகையில் நடந்துகொள்ளும் வீடியோ பல டிவி சேனல்களில் வெளியாகியுள்ளது. அதிமுக ஐடிகள் மூலமாக இணையத்திலும் பரவி வருகிறது.

chennai ecr annamalai

காரில் இருக்கும் பெண்கள் பதற்றத்துடன் பேசும் வகையில் இந்த வீடியோவானது இருந்தது. அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது? எப்போது இந்த சம்பவம் நடந்தது?, காரில் துரத்திய இளைஞர்கள் யார் என்று எந்த விவரமும் தெரியவில்லை. இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கூறியதாவது:- நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள். நானும் பார்த்தேன். ஏனென்றால் ஈசிஆர் பகுதியில் தான் வசித்து வருகின்றேன். பெண்கள், இளைஞர்கள் என எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக செல்கிறார்கள். ஆனால் நாம் பார்க்கும் போதெல்லாம், அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகத் தான் இருக்கிறது.

சரியான பாதுகாப்பு அங்கே இருக்காது. காலை, அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் அங்கு சரியான பாதுகாப்பு இருக்காது. இன்றைக்கு திமுக கட்சியின் கொடி போட்டிருந்த காரில், அந்த பெண்களிடம் மிக மோசமாக நடந்துக்கொள்ளக் கூடிய வீடியோ.. இதை எல்லாரும் பார்த்து இருப்பீங்க. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும் கூட தினமும் ஒரு உதாரணங்கள் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கின்றன.

நாட்டில் பெண் ஒருவர் சுதந்திரமாக என்றைக்கு நடந்து செல்கிறார்களோ அன்றைக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக அவர் கூறினார். இந்தியா முழுவதும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நள்ளிரவில் பெண்கள் சென்றால் பிரச்சினை. பகலில் சென்றாலும் பிரச்சினை. அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்திலும் அங்கு படிக்கக் கூடிய பெண்களுக்கும் பிரச்சினை.

இரவு 7 மணியை தாண்டினாலும் பிரச்சினை. எல்லா நேரத்திலும்கூட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தினமும் நிரூபணம் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இன்னொரு சான்றாக தான் ஈசிஆர் சம்பவம். தமிழக அரசிடம் சொல்வது என்னவென்றால், காவல்துறைக்கு பட்ரோல் வண்டி வாங்கி கொடுங்க. டூவிலர் வாங்கிக்கொடுங்க.

காவல்துறைக்கு எந்தவித உபகரணங்கள் கொடுக்காமல், வேலைக்கு ஆட்கள் எடுக்காமல், காவல் நிலையங்களை அதிகப்படுத்தாமல் கையாளாகாத தமிழக திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு பெண்களுக்கு எதிராக நடக்கின்ற அட்டூழியங்களை அடக்குவதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாமல் இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+