திமுகவை சீண்டிய பிரவீன்.. பதிலுக்கு ஆதரவாக வந்த ஜோதிமணி, ப. சிதம்பரம்.. காங்கிரஸுக்குள் பிளவு!
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தனது கூட்டணிக் கட்சியான திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒரு தீவிரமான பேரத்தை நடத்தத் தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுபட்டுள்ள இரண்டு வெவ்வேறு கருத்துகளால் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்படும் என்று கதர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பக்கம் பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். தமிழக அரசை விமர்சனம் செய்கிறார்கள்.

திமுகவை விமர்சிக்கும் பிரவீன் சக்ரவர்த்தி
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி-யைவிட 2 மடங்கு அதிகம்.
இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடன்/ உள்நாட்டு உற்பத்தி, கொரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு ஆதரவாக வந்த ப. சிதம்பரம், ஜோதிமணி
இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தை ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில் முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற கட்டமைப்பு, நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டில் முன்னிலை வகிக்கிறது. மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் உத்திரப்பிரதேசம் பின்தங்கி, நிறுவன நிர்வாகத்திற்குப் பதிலாக "புல்டோசர் ராஜ்" மாதிரியை ஊக்குவிக்கிறது.
கடனை அதன் விளைவுகளுடன் இணைத்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன் பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, வளர்ச்சி மற்றும் மனித வளத்தை வலுப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் நிதி கொள்கைகளும் இங்கு முக்கியம். தமிழ்நாடு அதிக வரிப்பணம் ஈட்டினாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது; உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமான நிதிப் பரிமாற்றங்களைப் பெறுகின்றன. இயற்கை பேரிடர்கள், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களிலும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி மறுக்கப்படுகிறது. எனவே, கடனை வளர்ச்சி, தனிநபர் குறியீடுகள், வரிப்பங்களிப்பு Vs நிதிப்பகிர்வு, நிர்வாகத் தரம் ஆகிய சூழல்களுடன் விவாதிக்க வேண்டும். இந்த அளவுகோல்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது., என்று பாராட்டி உள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் இதே கருத்தை திமுகவிற்கு ஆதரவாக கூறி உள்ளனர்.
இன்னொரு பக்கம் ப. சிதம்பரம் , இலவச இருப்பிடச் சான்றிதழ்* ஜனவரி 25 வரை கட்டணமின்றி இருப்பிடச் சான்றிதழைப் பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏதுவாக கட்டணமின்றி வழங்க முடிவு. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். 'நலம் காக்கும் ஸ்டாலின்' மிகச் சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை நான் பார்த்து மகிழ்ந்தேன், என்று பாராட்டி உள்ளார்.
பிளவுபட்ட கருத்துக்கள்
காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுபட்டுள்ள இரண்டு வெவ்வேறு கருத்துகளால் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்படும் என்று கதர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் பிரவீன் சக்ரவர்த்தி திமுகவை விமர்சனம் செய்கிறார். இன்னொரு பக்கம் ஜோதிமணி, ப. சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவை பாராட்டுகிறார்கள். இதுதான் காங்கிரஸ் உள்ளே பிளவை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஒரு பிரிவினர், திமுக ஒதுக்கும் எண்ணிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகின்றனர். மற்றொரு பிரிவினர், 40 முதல் 45 தொகுதிகள் மற்றும் அதிகாரப் பங்கீட்டிற்காக திமுகவுடன் பேரம் பேச வேண்டும் என்று விரும்புகின்றனர். மூன்றாவது பிரிவினர், நடிகர் விஜய்யின் TVK கட்சியுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று கூறுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் திமுக உரசல்
காங்கிரஸும், திமுகவும் 2004 முதல் அனைத்துத் தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டுள்ளன. ஆனால், 2014 மக்களவைத் தேர்தல் மட்டும் விதிவிலக்கு. இதில் காங்கிரஸ் தனித்து நின்றது. திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 2006-ல் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 2011-ல் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், இது 2016-ல் 41 ஆகவும், 2021-ல் 25 ஆகவும் குறைந்தது. இதுவே காங்கிரஸ் போட்டியிட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
தற்போது காங்கிரஸுக்கு 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல தலைவர்கள் விரும்புகின்றனர். இந்த கருத்தை ஆதரிப்பவர்கள், தொகுதிகள் படிப்படியாக குறைக்கப்பட்டதையும், திமுக தலைவர்கள் காங்கிரஸ் தொண்டர்களைப் புறக்கணிப்பதையும், அவர்களது நலன்களைப் பாதுகாக்கத் தவறியதையும் தங்கள் கருத்துக்குக் காரணங்களாகக் குறிப்பிடுகின்றனர்.
திமுக - காங்கிரஸ் குடைச்சல்
இந்த கூட்டணியில் கட்சிக்கு உரிய மரியாதை கிடைப்பது அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் பொது மேடைகளில் திமுகவை வெளிப்படையாக விமர்சிப்பதும், 2026 தேர்தல்களில் அதிக இடங்களைக் கோருவதும் தற்போது அதிகரித்துள்ளன. செப்டம்பர் 27 அன்று கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, ராகுல் காந்தி நடிகர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய பிறகு இந்தக் குரல்கள் மேலும் வலுப்பெற்றன.
இது, திமுகவுடனான பேச்சுவார்த்தையில் நடிகர் விஜய்யை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறதா என்ற தீவிர ஊகங்களுக்கு வழிவகுத்தது. இந்த தொலைபேசி அழைப்பு ஒரு மரியாதை நிமித்தமான அழைப்பு என்றும், இதில் அரசியல் எதையும் பார்க்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் தெரிவித்தபோதிலும், வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன.
காங்கிரஸ் அமைத்த டீம்
கூட்டணி குறித்த தொண்டர்களின் கருத்துக்களை அறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. "நாம் பிளவு பற்றி பேசும் இந்த தருணத்தில், காங்கிரஸ் திமுகவுடன் வலுவான மற்றும் சித்தாந்த ரீதியான கூட்டணியில் உள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் நமது தனிப்பட்ட பலத்தையும் பார்க்க வேண்டும். நமக்கு தனிப்பட்ட சூழல் சாதகமாக இல்லை. நாம் தனியாக வெற்றி பெற முடியாது. மேலும், திமுகவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸை ஆதரிக்கும் 32 எம்பிக்கள் உள்ளனர் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது" என்று சில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
2026 தேர்தல்களில் காங்கிரஸுக்கு திமுக கூட்டணியில் நீடிப்பதுதான் "ஒரே வழி" என்றும், அதிலிருந்து விலகுவது தவறாக முடிவடையும் என்றும் சிலர் கூறுகின்றனர். திமுகவுடன் எங்களுக்குப் பிரச்சினைகள் இல்லை என்பதை நான் மறுக்கவில்லை. திமுகவுடன் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன, ஆனால் இந்தத் தேர்தலுக்கு திமுக கூட்டணியை விட்டு பிரிவது பேரழிவாக மட்டுமே இருக்கும். மேலும், TVK இப்போதைக்கு நல்ல ஆப்ஷன் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
காங்கிரஸ் - திமுக நெருக்கம்
காங்கிரஸ் சுமார் ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்றுத் தருகிறது என்பதையும், அதற்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதையும் திமுக உணர வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். 2021-ல் 25 தொகுதிகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், ஏனெனில் திமுக பெரும்பான்மை பெறுவதற்கு குறைந்தபட்சம் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று வாதிட்டது. திமுக எங்களை மதிக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் அது நடக்கவில்லை.
எங்களுக்கு அதிக தொகுதிகளும், அதிகாரப் பங்கீடும் வேண்டும். இப்போது திமுகதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். மேலும், TVK என்ற ஒரு விருப்பம் காங்கிரஸுக்கு இருப்பதால், திமுக தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கலாம் என்றும் அவர்கள் வாதம் வைக்கின்றனர். இருப்பினும், TVK-யை பயன்படுத்தி திமுக மீது அழுத்தம் கொடுப்பது பலனளிக்காது திமுக இதற்கெல்லாம் மசியாது என்றும் சிலர் ஒப்புக்கொள்கின்றனர்.
விஜய் ஒரு புதியவர், அவரது பலம் மற்றும் பலவீனங்கள் எங்களுக்குத் தெரியாது. ராகுல் விஜய்யுடன் பேசியது, அவர் மதச்சார்பற்ற கொள்கைகளை ஆதரிப்பதாலும், அவருடன் தொடர்பைப் பேண வேண்டும் என்பதற்காகவும்தான். இதன் பொருள் நாம் அவருடன் நெருங்கிப் பழகுகிறோம் என்பதோ அல்லது அவர் எங்களுடன் நெருங்கிப் பழகுகிறார் என்பதோ அல்ல.. இது இயல்பான நட்பு.. ஆனால் கூட்டணி அல்ல என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
திரிஷாவுக்கு வாழ்த்துகள் – விஜய் யோசித்திருப்பார்! இனி இதுபற்றி பேசமாட்டேன் – பார்த்திபன் மன்னிப்பு -
அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியதே திமுக தான்.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு! -
Vijay: 10 நாட்களில் தமிழகத்தை உலுக்கிய பாலியல் கொலைகள்! விடிந்ததும் பதறி போய் லிஸ்ட் போட்ட விஜய் -
LPG தட்டுப்பாடு: எரிவாயு சிலிண்டர் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க.. தவெக -
நான் வருவேன்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. சுணங்கி கிடந்த தவெக தலைகளுக்கு.. சர்ப்ரைஸ் தகவல்! -
பனையூரில் 60 நிர்வாகிகளுக்கு டேட்டாவுடன் கவர் கொடுத்த தவெக.. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்? -
மாதம்பட்டி ரங்கராஜனை தொடர்ந்து.. விஜய் த்ரிஷாவை வம்புக்கு இழுத்த குரோஸி! கையில் சிலிண்டருடன் அட்ராசிட்டி -
விஜய் எங்கள் கூட்டணியில் இணைந்தால் தூக்கி கொண்டாடுவோம்.. ஓப்பனாக இறங்கிய செல்லூர் ராஜூ -
பாஜக கூட்டணியில் விஜய்..? பியூஷ் கோயல் கொடுத்த சிக்னல்.. விஷயம் டாப் சீக்ரெட் -
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே! -
விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி.. பால்குடம் எடுத்த தவெக பெண்கள்.. திரும்பிப் பார்த்த ஈரோடு!












Click it and Unblock the Notifications