சென்னை தொழிலதிபரை கட்டிவைத்து சொத்துக்களை பறித்த புகார்! போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை பண்ணை வீட்டில் கட்டிவைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய புகாரில் திருமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 போலீசார் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவரை பண்ணை வீட்டில் கட்டிவைத்து காவல்துறை அதிகாரிகள் சொத்துகளை எழுதி வாங்கியதாக புகார் எழுந்தது.

Intimidation Property complaint: CBCID filled a case against 10 people, including 6 cops

2019 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். ஆனால், 2020 ஆம் ஆண்டுதான் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன்பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழிலதிபர் ராஜேஷை கட்டி வைத்து சொத்தை எழுதிய வாங்கிய புகாரில் சிக்கிய
திருமங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த 6 போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

அதாவது திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ பாண்டியராஜன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+