1,000 கிலோ யானை தந்தம் திருட்டு? வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் சென்னை நீதிமன்றத்தில் விளக்கம்
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என்று உயிரியல் பூங்காவின் இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இது கடந்த 1855ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்கா இதுவாகும். மொத்தம் 228.4 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா பரந்து விரிந்துள்ளது.

இங்கு பாலூட்டிகள், பறவைகள், பாம்புகள், நீர்வாழ் உயிரினங்கள் என ஏராளமானவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது.
இந்நிலையில் தான் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு இன்று வழக்கை விசாரித்தது.
அப்போது காணொளி காட்சி மூலமாக உயிரியல் பூங்கா இயக்குனர் ஆஷிஷ் குமார் ஸ்ரீ வத்சவா ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர், பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட 1830 கிலோ யானை தந்தங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கிட்டங்கியில் பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்ததாகவும், ஒரு கிலோ எடையை கொண்ட இரண்டு துண்டுகள் மட்டும் ஒப்பந்த பணியாளரால் திருடப்பட்டதாகவும் பிறகு அது மீட்கப்பட்டதாகவும், ஆயிரம் கிலோ யானைத்தந்தம் திருடப்பட்டதாக வெளியான செய்தி தவறு எனவும் விளக்கம் அளித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்போது பல ஆண்டுகளாக இந்த யானை தந்தங்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது அவற்றை அழிப்பதற்கான நடைமுறை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ், யானை தந்தங்களை அழிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கிவிட்ட காரணத்தினால், குழு அமைத்து இந்த யானைத் தந்தங்கள் அழிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை கணக்கிட்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி அழித்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications