Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதவ் அர்ஜுனா வீட்டை சூழ்ந்த அமலாக்கத்துறை டீம்.. பிரஷர் போட்ட திமுக? பின்னணியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா எதிராக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுக்கு பின்னணியில் திமுகவின் அழுத்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

லாட்டரி மார்ட்டினுக்கு தொடர்புடைய அவரது வீடு, அலுவலகங்களிலும், மார்ட்டினின் மருமகனும் சிறுத்தைகள் கட்சியில் து.பொ.செ.வுமான ஆதவ்அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் ஆதவ். மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் களமிறங்கி தீவிரமாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.

enforcement directorate lottery martin

அதிகாலையே அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களுக்கு சென்றனர். ஒரே நேரத்தில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இப்படிப்பட்ட நிலையில்தான் லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா எதிராக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுக்கு பின்னணியில் திமுகவின் அழுத்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, நேற்று வரை சினிமாவில் நடித்து வந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? என்று உதயநிதி ஸ்டாலினை வம்புக்கிழுத்ததுடன், முதல்வர் ஸ்டாலினின் முடிவையும் நக்கலடிப்பது போல பேசினார் ஆதவ். திமுகவை ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் சீண்டும் வகையில் கடுமையாக பேசினார். இதனை முதல்வரும் அவரது குடும்பமும் ரசிக்கவில்லை. ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவனுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு மூலம் அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

திமுகவின் வருத்தத்தையும் திருமாவிடம் பதிவு செய்தார் வேலு. ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை திருமா. அதேசமயம், திமுக கூட்டணியை விட்டு சிறுத்தைகளை வெளியே கொண்டு வரும் அரசியலையும் செய்து வருகிறார் ஆதவ். அவரது யோசனைக்கு திருமாவும் ஆதரவாக பேசுகிறார். அப்படி பேசிய ஒரு விசயம் தான், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற திருமாவின் பேச்சு.

இது மட்டுமல்லாமல், பூரண மதுவிலக்கை வலியுறுத்தும் வகையில் போதை எதிர்ப்பு மாநாடு என்று திமுக அரசுக்கு எதிராக திருமா நடத்திய மாநாட்டின் பின்னணியில் ஆதவ் தான் இருந்தார். ஆக, திமுகவுக்கு எதிராக இயங்கும் ஆதவ் மீது, நாம் வலியுறுத்திய நிலையிலும் நடவடிக்கை எடுக்காமல் திருமா இருந்து வருவதை திமுகவால் ஏற்க முடியவில்லை. மேலும், விஜய்யின் கட்சிக்கு பெருமளவில் பொருளாதார உதவிகளை மார்ட்டின் செய்து வருகிறார்.

இதன் பின்னணியிலும் ஆதவ் இருப்பதாக கருதுகிறது திமுக. இந்த நிலையில்தான், மார்ட்டின் மற்றும் ஆதவ்விடம் இருக்கும் கறுப்பு பணத்தை முடக்க வேண்டும் என்ற திட்டத்தில், அமலாக்கத்துறையிடம் திமுக அழுத்தம் கொடுத்துள்ளது. இதற்காக சில அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளனர். மத்திய அரசுடன் சமீபகாலமாக சுமூகமான சூழலை திமுக கையாண்டு வருவதால், ஒரு பிடிமானமுள்ள நெருக்கம் மத்திய , மாநில அரசுகளுக்கிடையே உருவாகியிருக்கிறது.

அந்த நட்பின் அடிப்படையில் டெல்லியில் கோரிக்கை வைத்திருக்கிறது திமுக அரசு. அதை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள். ஏற்கனவே மார்ட்டினுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் கீழ்க்கோர்ட் மார்ட்டினுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு செய்த மேல்முறையீட்டில் அந்த தீர்ப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மார்ட்டினுக்கு எதிரான வழக்கு நடந்து வரும் நிலையில்தான், அமலாக்கத்துறையும் இதன் உள்ளே நுழைந்து, இரண்டாவது முறையாக சோதனை நடத்துகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+