Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போச்சு.. போச்சு! செந்தில் பாலாஜியை காரில் ஏற்றி.. மெயின் இடத்துக்கு செல்லும் அமலாக்கத்துறை! திக்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை முக்கியமான இடம் ஒன்றிற்கு விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பாக நேற்று காலை 9 மணியில் இருந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். காலையில் தொடங்கிய விசாரணை விடாமல் நடைபெற்று வருகிறது. காலை 8.30 மணிக்கு உணவு முடித்த பின் தொடங்கிய விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

Is Enforcement Directorate planning to take Senthil Balaji for the investigation in Karur?

இன்றும் அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணைக்கு பொறுமையாக, அனைத்து கேள்விகளுக்கும் செந்தில் பாலாஜி பதில் சொல்லி வருகிறாராம். செந்தில் பாலாஜியிடம் எஸ் ஆர் நோ கேள்விகள் நேற்று 50 கேட்டுள்ளனர். இதற்கு அவர் சொன்ன பதிலை வைத்து கிளை கேள்விகள் 40 கேட்டுள்ளனர். இதற்கு செந்தில் பாலாஜி விரிவாக பதில் அளித்து இருக்கிறார்.

டெல்லி பயணம்: இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை விரும்பும் என்று கூறப்பட்டது. ஆனால் அது தேவையில்லாத நேர விரயத்தை ஏற்படுத்தும். தற்போது 12ம் தேதி வரை மட்டுமே அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி கஸ்டடி கிடைத்துள்ளது.

இப்போது அவர் டெல்லி வரை சென்றால் சரியாக இருக்காது. விசாரணை பாதிக்கப்படும். இதனால் செந்திலோ பாலாஜி தமிழ்நாடு விட்டு அழைத்து செல்லப்பட மாட்டார் என்று கூறப்பட்டது.

கரூர் பயணம்: இந்த நிலையில்தான் டெல்லி செல்லவில்லை என்றாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூருக்கு விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கரூரில் செந்தில் பாலாஜி சொந்தமாக வீடு கட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன.

அங்கே அவருக்கு நிறைய சொத்துக்கள் இருப்பதாகவும், முதலீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இடங்களில் எல்லாம் அமலாக்கத்துறை கடந்த சில வாரங்களாகவே விசாரணை செய்து வருகிறது. செந்தில் பாலாஜி கோர்ட் கஸ்டடியில் இருந்த போது அமலாக்கத்துறை இங்கே சோதனைகளை செய்தது.

இந்த நிலையில்தான் தற்போது செந்தில் பாலாஜியை நேரடியாகவே கரூருக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம். காரில் மாலைக்கு பின் அழைத்து சென்று மறுநாள் கரூரில் வைத்து பல்வேறு இடங்களுக்கு கூட்டி சென்று விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம்.

கைது நடவடிக்கை: இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தை வைத்து சிலர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவரிடம் வாங்கப்படும் வாக்குமூலம் சிலருக்கு குறி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக செந்தில் பாலாஜி தம்பி கைது செய்யப்படும் வாய்ப்புகள் கூட உள்ளன. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை தேடும் பணிகள் அமலாக்கத்துறை களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அசோக்கின் இருப்பிடத்தை மத்திய உளவுத்துறை கண்டறிந்து அமலாக்கத்துறைக்கு தெரியப்படுத்தி விட்டது.

அந்த வகையில், அசோக் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமலாக்கத்துறைக்கு தெரியும். அதனால், 27-ந்தேதி அவர் ஆஜராகாமல் தவிர்த்தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டு, அவரை கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குதிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+