Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் அட்டை இருக்கா? கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷனில் பொருளை வாங்க முடியாதா? தமிழக அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது என்றும் சோஷியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இதற்கு தமிழக அரசு விளக்கம் ஒன்றினை தந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான அடையாள அட்டையாகிவிட்டது.. தற்போது மொத்தம் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டையை வைத்திருக்கிறார்கள்.. எனவே, ஆதார் இல்லாமல் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது.

aadhaar card ration goods fingerprint

புதுப்பிக்க வேண்டும்: ஆதார் நம்பர் இருந்தால்தான், கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது போன்ற அரசின் பல்வேறு மானியங்களை பெற முடியும்.. அரசின் நலத்திட்டங்களையும், சேவைகளையும் உடனுக்குடன் பெற முடியும். 10 வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இதுவரையில் புதுப்பிக்காத ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டே வருகிறார்கள்.

https://myaadhaar.uidai.gov.in/
என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 14, 2024க்கு முன் ஆதார் அட்டை ஆவணங்களை ஒரு நபர் புதுப்பிக்கவில்லை என்றால், myAadhaar என்ற ஆதார் போர்ட்டலுக்குள் நுழைந்து ரூ.25 அல்லது இயற்பியல் ஆதார் மையங்களில் ரூ.50 செலுத்தி, அவர்களின் அடையாள மற்றும் முகவரி சான்று ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும்.

புதிய புரளி: அந்தவகையில், செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லையானால், ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள் என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது.. இந்த வதந்திக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த வதந்தி குறித்து தமிழக உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.. அந்த அறிக்கையில், "ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பொய்யான தகவல்: கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை கைரேகைக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+