ஆதார் அட்டை இருக்கா? கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷனில் பொருளை வாங்க முடியாதா? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது என்றும் சோஷியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இதற்கு தமிழக அரசு விளக்கம் ஒன்றினை தந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான அடையாள அட்டையாகிவிட்டது.. தற்போது மொத்தம் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டையை வைத்திருக்கிறார்கள்.. எனவே, ஆதார் இல்லாமல் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது.

புதுப்பிக்க வேண்டும்: ஆதார் நம்பர் இருந்தால்தான், கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது போன்ற அரசின் பல்வேறு மானியங்களை பெற முடியும்.. அரசின் நலத்திட்டங்களையும், சேவைகளையும் உடனுக்குடன் பெற முடியும். 10 வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இதுவரையில் புதுப்பிக்காத ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டே வருகிறார்கள்.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 14, 2024க்கு முன் ஆதார் அட்டை ஆவணங்களை ஒரு நபர் புதுப்பிக்கவில்லை என்றால், myAadhaar என்ற ஆதார் போர்ட்டலுக்குள் நுழைந்து ரூ.25 அல்லது இயற்பியல் ஆதார் மையங்களில் ரூ.50 செலுத்தி, அவர்களின் அடையாள மற்றும் முகவரி சான்று ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும்.
புதிய புரளி: அந்தவகையில், செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லையானால், ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள் என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது.. இந்த வதந்திக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த வதந்தி குறித்து தமிழக உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.. அந்த அறிக்கையில், "ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
பொய்யான தகவல்: கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை கைரேகைக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications