‘கட்டெறும்பு’ பாஜகவில் இருந்து நீக்கமா? பரவி வரும் அறிக்கை.. விளக்கம் அளித்த கரு.நாகராஜன்!
சென்னை: கட்டெறும்பு என்ற இசக்கி முத்து, பாஜகவில் இருந்து நீக்கப்படுவதாக ஒரு அறிக்கை பரவிய நிலையில், அது போலியானது எனத் தெரிவித்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
சமூக வலைதளத்தில் 'கட்டெறும்பு’ என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருபவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த இசக்கி முத்து. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருக்கிறார். பாஜகவுக்கு ஆதரவாகவும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் பதிவிடுவது இவரது வழக்கம்.

இந்நிலையில், “கட்டெறும்பு என்ற இசக்கி முத்து நம் கட்சிப் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்துள்ளார், தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார், எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டு பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாஜகவை சேர்ந்த பலருமே கூட இது உண்மையா என்ற வகையில் ஐயத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், “யாரோ போலியானவர்கள் போலியாக ஒரு கடிதத்தை பரப்பி வருகிறார்கள். யாரும் நம்ப வேண்டாம். நன்றி வணக்கம்!” என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து சாதி மோதலையும், வன்முறையையும் தூண்டும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் கட்டெறும்பு என்ற இசக்கி முத்து ஒரு பதிவை வெளியிட்டார்.
வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதன் பேரில், ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் பதிவு செய்த திருச்செந்தூரை சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இசக்கி என்ற இசக்கிமுத்து மீது வழக்கு பதியப்பட்டது.
4 பிரிவுகளின் கீழ் இசக்கி முத்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணைக்கு பிறகு பாஜக பிரமுகர் கட்டெறும்பு என்ற இசக்கியை கைது செய்த ஸ்ரீவைகுண்டம் போலீசார், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உடல் நல பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்து மன்னிப்பு கடிதம் எழுதிய கட்டெறும்பு என்ற இசக்கி, நான் தற்போது என்னுடைய தவறை உணர்ந்துவிட்டேன். இதுபோன்ற தவறை மீண்டும் செய்யமாட்டேன் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
உடல் மெலிந்து.. 2 மாதத்திற்கு பின் அறிவாலயம் வந்த துரைமுருகன்! கைதாங்கலாக கூட்டிசென்ற பூச்சி முருகன் -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
பாமக ராமதாஸ் அதிரடி முடிவு.. இன்று வெளியாகிறது கூட்டணி அறிவிப்பு -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
காங்கிரஸின் ஒரே நம்பிக்கையிலும் ஆப்பு.. கேரளா சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! என்ன இப்படி ஆகிடுச்சு -
Ramadoss + Vijay?: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்திக்கிறார் செங்கோட்டையன்? கூட்டணி இறுதி? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்!












Click it and Unblock the Notifications