அப்போ.. மக்களுக்கு பெட்ரோல், சிலிண்டர் விலையை விட மதம்தான் முக்கியமா? காங்கிரஸ் கேள்வி
சென்னை: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ள நிலையில், விலைவாசி உயர்வு வேலையிழப்பை விட மதம்தான் முக்கியத்துவம் பெறுகிறதா என தமிழ்நாடு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன.
இதுவரை வெளியான முடிவுகளின்படி உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா என 4 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் நிலைமை
நாட்டின் 2 வது பெரிய தேசிய கட்சி என கருதப்படும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. குறிப்பாக ஆட்சியிலிருந்த பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் அக்கட்சி பறிகொடுத்துள்ளது நாடு முழுவதும் உள்ள அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காங்கிரஸின் இந்த படுதோல்வி குறித்தும் பாஜவின் இந்த வெற்றி குறித்து சமூக வலைதளங்கள் அரசியல் பிரமுகர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

யுத்தம் தொடங்கியுள்ளது
தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் யுத்தம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. துணிச்சலோடும் திறமையோடும் தொடர்ந்து பயணிப்போம்" எனத் தெரிவித்தார்.

இதுதான் முக்கியமா
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழில்நுட்ப அணி தேர்தல் தோல்வி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, வேலைவாய்ப்பு இல்லை, வேலை இழப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, இதை விட மதம் முக்கியத்துவம் பெறுகிறதா???" எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ரீடுவீட் செய்துள்ளனர்.
Recommended Video

தமிழ்நாடு காங்கிரஸ்
மத்திய பாஜக அரசின் 7 ஆண்டுகால ஆட்சியில் வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, மதவாதம் தலைதூக்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட பலரும் பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வந்த நிலையில், பாஜகவின் இந்த வெற்றி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications