EXCLUSIVE: எடப்பாடி ஆட்சியில் ஊழலா? ஓபிஎஸுக்கு எதிராக ஊழல் ஆதாரம் வரட்டும்.. கல்யாணசுந்தரம் பேட்டி
சென்னை: ஜெயக்குமார் சொல்வதைபோல் அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஊழல் செய்ததற்கான வாய்ப்புகள் இருந்தால் காவல்துறையில் புகாரளிப்போம் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் எடுத்த நேர்காணலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கல்யாணசுந்தரம் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் நெறியாளர், "திமுகவை எதிர்ப்பதே நோக்கம் என்கிறீர்கள். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை விட அதிமுக மீது அதிக ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார். ஓபிஎஸ் கடந்த ஆட்சியில் சம்பாதித்துவிட்டதாக கூறுகிறார்." என்று கூறினார்.

தவறுகள் நடந்திருக்கலாம்
அதற்கு கல்யாணசுந்தரம், தவறுகள் நடந்திருக்கலாம். அதை சுட்டிக்காட்டலாம் என்று பதிலளிக்க, "அந்த ஆட்சியின் முதலமைச்சர் யார்? உங்கள் கட்சியிலிருந்தே இந்த குற்றச்சாட்டு வருவதால் இந்த கேள்வியை முன்வைக்கிறேன். தங்கள் அமைச்சரைவில் ஒரு அமைச்சர் ஊழல் செய்தார் என உள்கட்சியில் இருந்து குரல் வந்தது தமிழ்நாடு வரலாற்றில் இது முதல் முறை." என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ஜெயக்குமார்
ஊழல் செய்துவிட்டாரா? சம்பாதித்துவிட்டாரா? ஒவ்வொரு அமைச்சர்களுடைய துறைகளில் என்ன நடந்துள்ளது என்று எங்களுக்கு தெரியாது. இன்று தெரிந்ததால் அதை கொண்டு செல்கிறோம். அமைச்சர் ஜெயக்குமாரை ஒரு வட்டத்தை அடைக்க முடியாது. தொடர்ச்சியாக ஜெயக்குமார் திமுகவின் முகத்திரையை கிழித்துள்ளார். எனவே திமுவை விட்டுவிட்டு இதை செய்கிறார் என்று சொல்ல முடியாது. அமைச்சர் ஜெயக்குமார் ஊழல் அமைச்சரவை என்று சொல்லவில்லை.

ஊழல் நிரூபிக்கப்படட்டும்
ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டை வைக்கிறார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படட்டும். அவருடைய ஆதங்கத்தை வைக்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இது உண்மையிலேயே நடந்ததா என்பது நிரூபிக்கப்படட்டும். தொண்டர்களுக்கு தவறாக எதுவும் நினைக்கமாட்டார்கள். ஊழல் புகார்கள் மாறி மாறி வைக்கப்படும்போது யார் உண்மையை பேசுகிறார்கள் என்பதை தொண்டர்களை யூகித்து அறிந்துகொள்கிறார்கள்.

முதலமைச்சரையும் தாண்டி தவறு
நாங்கள் மீண்டும் ஒற்றைத் தலைமையின்கீழ் அரசை அமைக்கப்போகிறோம். அதன் பின்னர் சலசலப்பு வராது. அன்று ஓபிஎஸ் அமைச்சராக இருந்தார். அவர் ஒரு தனிநபர். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உண்மையிலேயே ஒரு முதலமைச்சரையும் தாண்டி தவறு நடந்துவிட்டதாகவே அர்த்தம். நாங்கள் இரட்டை தலைமையின் ஆட்சியை நடத்தினோம். அதில் முதலமைச்சர் இருந்தார். அவருக்கு அமைச்சரவைகளை கவனித்தார்.

காவல்துறை செல்வோம்
எந்த அமைச்சரவையிலும் ஊழல் இல்லை என்பதை நாங்கள் வெளிப்படையாக இன்று வரை சொல்லி இருக்கிறோம். இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். அதிமுக வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை கொடுத்திருக்கிறது. திமுக வேண்டுமானால் வழக்கு தொடரட்டும். ஒரு பிரதான எதிர்க்கட்சியாக முழுமையான ஆதாரங்கள் இருந்தால் காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்தார்.












Click it and Unblock the Notifications