முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்தார்.. இந்நிலையில் தான் கூட்டணியில் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று அறிவிப்பதாக கூறினார். இதையடுத்து சென்னையில் இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி உள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்தார்.
வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக இருக்கிறார். இவர் கூட்டணி தொடர்பாக திமுகவிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.

10 கோரிக்கைகள்
அப்போது வேல்முருகன் கடந்த முறையை விட கூடுதலாக ஒரு இடமும், தனிச்சின்னத்தில் போட்டியிடவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.. திமுக கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும். அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துதல் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தல்.
அதேபோல் மத்திய அரசு வேகைலளில் தமிழர்களுக்கு 80 சதவீத இடதுக்கீடு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஈழ தமிழர்களை விடுவித்து சொந்த நாட்டுக்கு அனுப்புதல், சுங்க கட்டணத்தை ரத்து செய்தல் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஏற்க மறுத்த திமுக
இதனை திமுக ஏற்க மறுத்தது. கடந்த முறையை போல் ஒரு தொகுதி தருவதாகவும், அதில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 10 கோரிக்கைகள் பற்றி திமுக சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேல்முருகன் அதிருப்தியானார்.
சமாதான முயற்சி தோல்வி
இந்நிலையில் தான் கட்சி சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு அளித்த பேட்டியில் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நிர்வாகிகள் கேட்டு கொண்டதாக கூறினார்.
இதையடுத்து அமைச்சர் எவ வேலு, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை வைத்த திமுக அவரை சமாதானம் செய்ய முயன்றது.ஆனால் வேல்முருகன் சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் தான், திமுக தன்னை அழைத்து பேசவேண்டும். இல்லாவிட்டால் கூட்டணி இருந்து வெளியேறும் என்று அவர் அறிவித்துள்ளார். அதோடு திமுக தனது முடிவை இன்று அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் எனது முடிவை இன்று அறிவிப்பேன் என்று கெடு விதித்தார்.
விலகுவதாக அறிவித்த வேல்முருகன்
இந்நிலையில் தான் சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுபற்றி வேல்முருகன் கூறுகையில், '' திமுகவிடம் ஒரு இடத்தை ஏற்க முடியாது என்று கூறினேன். தொகுதி பங்கீடு பிரச்சனை இல்லை.
ஏனென்றால் தொகுதி பங்கீடு ஒருபுறம் இருந்தாலும், அறம் சார்ந்து 10 கோரிக்கைளை முன்வைத்தோம். கோரிக்கைகைள நிறைவேற்ற வலியுறுத்தினேன். ஆனால் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் எங்களின் கோரிக்கையை திமுக பொருட்படுத்தவில்லை. சமூக நீதிக்கு எதிரான சக்தியை திமுக கூட்டணியில் வைத்துள்ளது.
திமுக மீது குற்றச்சாட்டு
பெரியண்ணன் பாணியில் திமுக செயல்படுகிறது. மக்களை பாதிக்கும் சுரண்டும் திட்டங்களுக்கு மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசும் அனுமதித்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளேன். தேர்தலை சந்திப்பது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பேன்'' என்றார். இதன்மூலம் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி உள்ளது.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!















Click it and Unblock the Notifications