இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக யாருக்காக இத்தனை நாள் அரசியல் செய்ததோ அவர்கள் மொத்தமாக ஒரே நாளில் மாறிப்போனார்கள். அதேபோல் யாருக்காக இத்தனை நாட்கள் கொள்கை எதிரி என பாஜகவை கடுமையாக விமர்சித்ததோ, அவர்களே இரக்கப்படும் அளவிற்கு மோசமாக திமுக பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் முடிந்த மறுநாளே தவெக பக்கம் போனதை திமுகவால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.. அத்துடன் திமுக உடன் இருந்த பெரும்பாலான கட்சிகள் பதவிக்காக தவெக பக்கம் போய்விட்டன. இப்போது கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தேசிய அரசியலில் பெரிய மாற்றம் நிகழ போகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி உள்ளது. இது பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக மாற போகிறது.. எப்படி என்பதை பார்ப்போம்.

திமுக 2004 தொடங்கி 2014ம் ஆண்டு தவிர மற்ற எல்லா நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தது. அதேபோல் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணி உருவானது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியிடம், 'இந்தியா' கூட்டணி வீழ்ந்ததால் 'ராஷ்டிரிய லோக் தளம்' உள்ளிட்ட கட்சிகள் விலகியது.

Is the DMK no longer part of the INDIA alliance Congress s actions hand a massive jackpot to BJP

தாவிய காங்கிரஸ்

அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி கழன்று த.வெ.க. ஆட்சியமைக்க கை கொடுத்தது. இதனால் தேசியளவில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியில் தி.மு.க. நீடிக்காது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.


டெல்லியில் கூட்டம்

ஏனெனில் டெல்லியில் வருகிற 8-ந்தேதி நடைபெறும் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்று அறிவித்துள்ளது,

திமுகவிற்கு அழைப்பு

இதுதொடர்பாக தி.மு.க. தலைமை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "டெல்லி 'கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்' வருகிற 8-ந்தேதி நடைபெறும் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வை பொறுத்தவரை 'நீட்' தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர்., தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு, ஒரே தேர்தல், பொதுச் சட்டம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.

திமுக பதில்

'இந்தியா' கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக தி.மு.க. இயங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.

திமுக விலகுகிறது

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வுக்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் தி.மு.க.வினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற 8-ந்தேதி டெல்லியில் நடைபெறும் 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது. ஆனால் அதே நேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், தி.மு.க. என்றைக்கும் குரல் கொடுக்கும்" என்று ஜென்டில்மேன் பாலிடிக்ஸை கூறியுள்ளது.

காங்கிரஸின் நிலைப்பாடு தான் காரணம்

இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவும் விலகுவது உறுதியாகி உள்ளது. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தான் இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கவே காரணமாக இருக்கிறார்கள். இவர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்க பல காரணம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சிகளின் நிலைப்பாடுகள் முக்கியமான காரணம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

ஒரே நாளில் வீழ்ச்சி

2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை யார் எல்லாம் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தார்களோ அத்தனை பேரும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி என 3 பேரும் ஒரே நாளில் வீழ்ந்துள்ளனர். இதில் இந்தியா கூட்டணியின் வலுவான பில்லராக இருந்தது திமுக தான்.

பாஜகவிற்கு ஜாக்பாட்

குறிப்பாக ஸ்டாலின் தான் ராகுல் காந்தியை பிரதமராக வேண்டும் என்று 2024ல் கடுமையாக உழைத்தார். தமிழ்நாடு, புதுச்சேரி என 40க்கு 40 இடங்களையும் வெல்ல வைத்தார். ஆனால் அவரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஜெயித்தே மறுநாளே தவெக பக்கம் போனதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் திமுக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும். அப்படி எடுக்கும் அதேநேரம் பாஜகவிற்கு சாதகமாகவே முடியும். தமிழ்நாட்டிலும் இத்தனை நாட்களாக சண்டை செய்ய முடியாமல் தவித்த பாஜகவிற்கு புதிய வழி காங்கிரஸ் முடிவால் உருவாகி உள்ளது. காங்கிரஸ் முடிவு பாஜகவிற்கு சாதகமாகி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+