என்னது.. "தடுப்பூசி திருவிழாவா".. 2 தடுப்பூசிகளை எத்தனை பேருக்கு போடுவீங்க.. ப.சிதம்பரம் காட்டம்..!
தடுப்பூசி திருவிழா என்று அழைப்பதா என ப சிதம்பரம் சாடி உள்ளார்
சென்னை: "2 தடுப்பூசி மட்டுமல்லாது, மற்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.. மேலும், இந்தியாவில் ஆதற்கான உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விநியோகங்களை அதிகரிப்பதற்கும் அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் சேர்த்து முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் தொற்று தீவிரம் அடைந்து வருகிறது.. லாக்டவுனும் போடப்பட்டுள்ளது.. இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, தடுப்பூசிதான்.. 45 வயதிற்கு மேற்பட்ட எல்லாருக்குமே 100 சதவீதம் தடுப்பூசி போட மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன...
அதற்காகத்தான், வரும் 14 முதல் 16ஆம் தேதி வரை அந்தந்த மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தவும், அன்றைய தினங்களில் தகுதி வாய்ந்த எல்லாருக்கும் தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 தடுப்பூசிகள்
இந்த அறிவிப்பினை அடுத்து, ப. சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "மற்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி அதனை தயாரிக்க உதவ வேண்டும்... இப்போது போடப்படும் கோவிஷீல்டு, கோவாக்சினை மட்டுமே வைத்து கொண்டு, 138 கோடி மக்களுக்கும் தடுப்பூசியை போட முடியாது... அது போதுமானதாகவும் இருக்காது.

உற்பத்தி
அதனால், நாட்டில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விநியோகங்களை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்... மேலும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கும் அரசு அனுமதி வழங்கவேண்டும்.. அதேபோல, அவைகளை உற்பத்தி செய்யவோ, அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவோ அனுமதிக்க வேண்டும்.

திருவிழா
இந்த தடுப்பூசி இயக்கத்தை "திருவிழா" என்று மத்திய அரசு சொல்ல விரும்புகிறது.. தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருக்கும்போது இது எப்படி திருவிழாவாகும்? கற்பனையாககூட அப்படி திருவிழாவாக இருக்க முடியாது.. தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிர்வாக ரீதியாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள அரசு, சொல்லாட்சி மற்றும் மிகைப்படுத்தி சொல்வதன் மூலம் அதன் மிகப்பெரிய தோல்வியை மூடிமறைக்கிறது.

இயக்கம்
சர்வதேச அளவில் தடுப்பூசி போடுவதையும், தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதை ஒழிக்கவேண்டும் என்று நாங்கள் தான் முதலில் வலியுறுத்தினோம். தடுப்பூசி என்பது நடைபெறும் ஒரு இயக்கமாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். நாளை மறுநாள், தடுப்பூசி செலுத்துவதற்கான மும்முரத்தில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், சிதம்பரத்தின் இந்த பதிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications