விஜய் வேங்கைவயல் செல்வதாக வந்த தகவலால் அவசரமாக தாக்கல் செய்யப்படவில்லை குற்றப்பத்திரிகை.. உண்மை இதோ
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க போவதாக தகவல் வெளியாகிய அடுத்த 2 நாளிலேயே, சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் விஜய் வேங்கைவயல் செல்கிறார் என்ற அவசரத்தில், தமிழக அரசு குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த உண்மை என்னவென்று பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதமாகிய நிலையில், குற்றவாளிகளை கண்டறிய வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், சம்பவம் தொடர்பான விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல் இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்திருக்கிறார்.
இதனால் பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. விஜய் வேங்கைவயல் செல்கிறார் என்ற தகவல் வெளியான பின்னரே, தமிழ்நாடு அரசு அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் விஜய் வேங்கைவயல் செல்கிறார் என்ற தகவல் வெளியாவதற்கு முன்பாகவே, நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தவெக தலைவர் விஜய் வேங்கைவயல் செல்வதாக வெளியான தகவல் ஜனவரி 21ஆம் தேதி தான். அதற்கு முன்பாக ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் சென்று புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடிய மக்களை சந்தித்தார்.
இதனால் விஜய்-ன் அடுத்த நகர்வு வேங்கைவயல் நோக்கி இருக்கும் என்று தகவல் வெளியாகியது. ஆனால் விஜய் பரந்தூர் மக்களை சந்தித்த ஜனவரி 20ஆம் தேதி வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் விஜய் வேங்கைவயல் செல்கிறார் என்ற அவசரத்தில், அந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
-
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான்












Click it and Unblock the Notifications