பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. குறிப்பாக, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தமிழக அரசியலில் புதிய அதிகார மையமாக தவெக உருவெடுத்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கணிப்புகளை வெளியிட்டிருந்தனர். அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்து தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Vijay Prashant Kishor Edappadi Palaniswami

"விஜய் முழுமையாக அரசியலில் இறங்கினால், தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளில் ஒன்றின் வாக்கு வங்கியை அவர் கவர்ந்து விடுவார்" என்று அவர் கூறியதாக அரசியல் வட்டாரங்களில் அப்போது பேசப்பட்டது.

பிரசாந்த் கிஷோர்

தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது, பிரசாந்த் கிஷோரின் அந்த கணிப்பு நிஜமாகி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெக பக்கம் நகர்ந்து வருவதாக வெளியாகும் தகவல்கள் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவும், பின்னர் ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவும் பல ஆண்டுகளாக தனித்துவமான வாக்கு வங்கியை வைத்திருந்தது.

அதிமுக

பெண்கள், கிராமப்புற மக்கள், நடுத்தர வர்க்க வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரின் ஆதரவை தொடர்ந்து பெற்றுவந்தது. ஆனால் சமீபத்திய தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், தலைமை தொடர்பான அதிருப்திகள் மற்றும் அணிப் பிரிவுகள் காரணமாக அந்த வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

உட்கட்சி மோதல்

குறிப்பாக, தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உருவான உட்கட்சி மோதல்கள் கட்சியின் அடித்தளத்தையே பாதித்ததாக கூறப்படுகிறது. பல முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதாகவும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த சிலருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியும் நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, சில நிர்வாகிகள் மாற்று அரசியல் பாதையை தேடி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பே தவெகவில் இணைந்த சில முன்னாள் அதிமுக பிரமுகர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதும் மற்ற கட்சிகளில் உள்ள நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசியலில் எதிர்கால வாய்ப்புகளை கணக்கிட்டு பலர் புதிய அரசியல் தளத்தை நோக்கி நகரலாம் என்ற பேச்சும் நிலவுகிறது. மறுபுறம், அதிமுக தரப்பினர் இதை ஏற்க மறுக்கின்றனர். அதிமுக இன்னும் வலுவான அமைப்பு கொண்ட கட்சி என்றும், சிலர் விலகிச் செல்வதால் கட்சி பலவீனமடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்

மேலும், கடந்த காலத்திலும் பல்வேறு சவால்களை சந்தித்து மீண்டு வந்த அனுபவம் அதிமுகவுக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், தொடர்ந்து வெளியாகி வரும் கட்சி தாவல் தகவல்கள் மற்றும் தவெகவின் வளர்ச்சி குறித்து வெளியாகும் செய்திகள் அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தடுத்த இடைத்தேர்தல்கள் இந்த மாற்றத்தின் உண்மையான தாக்கத்தை வெளிப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

வாக்கு வங்கி

இச்சூழலில், தமிழக அரசியலில் தவெக வேகமாக வளர்ந்து வருகிறதா? அல்லது தற்போதைய பரபரப்பு தற்காலிக அரசியல் அலைதானா? என்பது வரவிருக்கும் தேர்தல்களில் தான் தெளிவாகும். அதிமுக ஜெ. உருவாக்கி வைத்திருந்த பாரம்பரிய வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது புதிய தலைமுறையின் ஆதரவு முழுமையாக தவெக பக்கம் நகருமா? என்பது தமிழக அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+