"நைட்டில் லுங்கியோடு".. சீனியர் செய்த அரசியல்.. கடுப்பான "குடும்பம்".. ஜெ.வுக்கு பறந்த "ரகசிய" மெசேஜ்
: ஜெயக்குமாருக்கு முக்கிய போஸ்டிங் கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்த செய்தி ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இது எத்தகைய மாற்றத்தை அதிமுகவுக்குள் ஏற்படுத்த போகிறது என்பது எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.
இந்த முறை மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா எம்பி போஸ்டிங் தராததற்கு காரணமே வேறு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
திமுக ஆட்சி ஏற்பட்டதில் இருந்து, ஊழல் தொடர்பான புகார்களில் மட்டுமே அதிமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், குற்ற பின்னணியில் ஜெயக்குமார் கைதானது அதிமுகவுக்கே அதிர்ச்சிதான்...

எடப்பாடி பழனிசாமி
அதிலும் இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்குள்ளேயே நுழைந்து லுங்கியுடன் கைது செய்ததில் எடப்பாடி பழனிசாமியே அதிர்ந்து போய் பார்த்தார்... காரணம், அதிமுகவின் குரலாய் மட்டுமல்ல, இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமியின் குரலாய் ஒலித்து கொண்டிருப்பவர் ஜெயக்குமார்தான்.. இவர் மீதே கையை வைத்துவிட்டதே திமுக? என்ற ஷாக்கில் இருந்து எடப்பாடியால் உண்மையிலேயே வெளிவர முடியாமல் போனது.. அன்றைய தினம் இரவே கண்டன அறிக்கையையும் காட்டமாக வெளியிட்டார்..

ஓபிஎஸ்
ஜெயலில் ஜெயக்குமாரை நேரிலும் சந்தித்து நம்பிக்கை தந்தார்... அதிமுகவை திரட்டி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும் நடத்தினார். அதற்கு காரணம் ஜெயக்குமார் மீதான எடப்பாடியின் நன்மதிப்புதான்.. அதுமட்டுமல்ல, ஜெயக்குமாரை வைத்து ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்கவும் எடப்பாடி ஏற்கனவே ஒரு பிளான் வைத்திருந்தார்.. அதன்படிதான், அவருக்காக கட்சியின் முக்கிய பொறுப்பை தரலாம் என்று யோசித்துள்ளார்.. குறிப்பாக, அக்கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கலாம் என்ற முடிவில் உள்ளதாக தகவல்கள் பரபரத்தன..

தமிழ்மகன் உசேன்
இப்போதைக்கு தமிழ்மகன் உசேன் தற்காலிக தலைவராக உள்ளதால், அந்த பொறுப்பைதான் ஜெயக்குமாருக்கு வழங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்.. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. கடந்த காலங்களில், சசிகலாவை மிக மோசமாகவும், கடுமையாகவும் விமர்சித்து வந்தவர் ஜெயக்குமார்தான்.. சசிகலா என்றாலே, எடப்பாடியே அமைதியாக இருந்தாலும், அவரைவிட அதிகமாக சீறியவர் ஜெயக்குமார்தான்.. எல்லாவற்றிற்கும் மேலாக திமுக அரசையே சீண்டி ஜெயிலுக்கு போன சரித்திர வரலாற்று நிகழ்வையும் நடத்தி காட்டியவர்..

மதுசூதனன்
அதனாலேயே அத்தகைய உயரிய பதவி ஜெயக்குமாருக்கு காத்திருப்பதாக தெரிகிறது.. அன்று வடசென்னையில் மதுசூதனன் எப்படி கெத்து காட்டினாரோ, அதுபோலவே, ஜெயக்குமாரும் செயல்படுவார் என்று எடப்பாடி அதிகமாக நம்புகிறாராம். அதனால்தானோ என்னவோ, ராஜ்யசபாவுக்கு 2 வேட்பாளரை அறிவித்துவிட்டபிறகு, ஜெயக்குமார் இன்னும் அதிகமாக சீனில் வந்து போகிறார்.. வழக்கத்துக்கு மாறாக, கடந்த சில நாட்களாகவே, சசிகலாவை சீண்டி கொண்டிருக்கிறார்..

பாஜகவில் இணையலாம்
"பாஜகவில் கூட சசிகலா இணையலாம் என்று கிண்டலடித்து, கூட்டணியில் உள்ள பாஜகவையும் வெறுப்பேற்றி உள்ளார்.. இப்போது விஷயம் என்னவென்றால், பதவி கிடைக்க போகிறது என்ற குஷியில் இப்படியெல்லாம் ஜெயக்குமார் பேசிவந்தாலும், அத்தனையும் சசிகலாவின் பார்வைக்கு சென்று கொண்டிருக்கிறதாம். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று இவர் பேட்டி தந்தது முதல், இப்போதைய சமீபத்திய பேட்டிகள் வரை அத்தனையும் சசிகலா டேபிளில் குவிந்துள்ளதாம்..

ரகசிய மூவ்கள்
இதனால் சசிகலா குடும்பம் அவர் மீது ஏகத்துக்கும் கடும் கோபத்தில் இருக்கிறதாம்... தினகரன் இப்போதைக்கு சசிகலாவிடம் இருந்து விலகல் போக்கை கடைப்பிடித்தாலும், தற்போதைய சூழலில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், நடராஜனின் சகோதரர்கள் பழனிவேலு, ராமச்சந்திரன் ஆகியோர் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இதில் திவாகரன், சில பல "மூவ்" களை ரகசியமாக செய்து வருகிறார்.

சோர்ஸ்கள்
இந்த நிலையில், ஜெயக்குமாரின் சசிகலாவுக்கு எதிரான பேச்சு அவரை ரொம்பவே கோபப்பட வைத்துள்ளதாம். இந்த நிலையில், அதிமுகவில் உள்ள சில சோர்ஸ்கள் மூலம் தனது கோபத்தை ஜெயக்குமாருக்கு பாஸ் பண்ணியுள்ளாராம் திவாகரன்.. அப்படியானால், இதற்கு கட்டுப்பட்டு ஜெயக்குமார் இனி சசிகலா விஷயத்தை அடக்கி வாசிப்பாரா? என்று தெரியவில்லை.. அப்படி அடக்கி வாசிக்க நேர்ந்தால், எடப்பாடி பழனிசாமி அதை எப்படி எடுத்து கொள்வார்? முக்கியமாக அந்த போஸ்டிங் பற்றி என்ன முடிவெடுப்பார் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications