Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிங்கார சென்னை.." தனியார் வசம் செல்லும் மேஜர் வேலை! வேகமெடுக்கும் மாற்றம்! உண்மையில் களநிலவரம் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது கழிவு மேலாண்மையைத் தனியார் நிறுவனங்கள் செய்து வரும் நிலையில், இதனால் யாருக்குப் பலன், யாருக்குப் பிரச்சினை என்பது குறித்துப் பார்க்கலாம்.

சென்னையில் இதற்கு முன்பு வரை அனைத்து இடங்களிலும் கழிவு மேலாண்மை என்பது மாநகராட்சி ஊழியர்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களே நகரில் கழிவு மேலாண்மை பணியைச் செய்து வந்தனர்.

 Is waste management effective in Chennai after privatisation

இருப்பினும், கழிவு மேலாண்மையில் பல புகார்களைப் பொதுமக்கள் முன்வைத்தனர். சாலைகளில் இருக்கும் குப்பைகள் தொடங்கி லாரியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் போது அவை அப்படியே பறப்பது வரை பல குற்றச்சாட்டுகளைச் சென்னைவாசிகள் முன்வைத்தனர்

கழிவு மேலாண்மை: இதற்கிடையே சென்னையில் சில காலத்திற்கு முன்பு கழிவு மேலாண்மையைத் தனியாருக்கு விடப்பட்டது. முதற்கட்டமாக 10 மண்டலங்களில் கழிவு மேலாண்மையைத் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் மீதமுள்ள ஐந்து மண்டலங்களிலும் கழிவு மேலாண்மையைத் தனியாரிடம் ஒப்படைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது எந்தளவுக்குப் பலன் கொடுத்துள்ளது என்பதை பார்க்கலாம்

இப்போது சென்னையில் ​​தொண்டியார்பேட்டை, அண்ணாநகர், ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களைத் தவிர அனைத்து மண்டலங்களிலும் கழிவு மேலாண்மை தனியாருக்கு விடப்பட்டுள்ளது. வட சென்னையில் ராம்கி என்விரோ நிறுவனமும், தெற்கு சென்னையில் ஊர்பேசர் சுமீத் நிறுவனமும் இந்த பணிகளைக் கவனித்து வருகிறது.

 Is waste management effective in Chennai after privatisation

பெரிய மாற்றம் இல்லை: திருவொற்றியூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கழிவு மேலாண்மை தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது. இது குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "கார்ப்பரேசன் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் குப்பைகளை கலேக்ட் செய்வதில் பிரச்சினை இருக்கும். இதனால் குப்பை தேங்கிவிடும். ஆனால் தனியார் நிறுவனங்கள் ஆள் வரவில்லை என்றாலும் மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறார்கள். இதனால் கலெக்ஷன் ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கிறது" என்றார்.

இருப்பினும், ஒட்டுமொத்தமாகத் தூய்மையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், சென்னை மாநகராட்சியிடம் புகார்களைப் பதிவு செய்வது எளிதாக இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

புலம்பும் ஊழியர்கள்: இந்த பணிகளைக் கவனிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், "லீவ் எடுப்பதில் பிரச்சினை இருக்கிறது. வார விடுப்பைத் தாண்டி அவசரத்திற்கு லீவ் கேட்டால், கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடந்தால், ஈஸியான வேலையைத் தருகிறார்கள். மேலும், டார்கெட்கள் எட்ட முடியாத அளவுக்கு இருக்கிறது.

எதாவது மோதல் ஏற்பட்டால், எங்களை கார்னர் செய்துவிடுகிறார்கள். அதிகமாக வேலை வாங்குகிறார்கள்.. சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்த போது இதுபோன்ற பிரச்சினைகளை நான் எதிர்கொண்டதே இல்லை" என்றார். எட்டவே முடியாத டார்கெட்களை அதிகாரிகள் கொடுப்பதாகவும் இதனால் ஏற்கனவே பலரும் வேலையில் இருந்து நின்றுவிட்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் பேட்டரி வாகன ஓட்டுநர்கள் 450 வீடுகளில் இருந்து கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் 120-150 கிலோ மக்கும் குப்பைகளையும், 15-20 கிலோ மக்காத குப்பைகளையும் சேகரிக்க வேண்டும். அதேபோல சாலையோரம் துப்புரவு பணியாளர்கள் 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். இந்த இலக்குகள் நிச்சயம் ஒவ்வொரு நாளும் அடைய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+