Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISRO: ககன்யான் திட்டத்தின் முக்கியமான சோதனை.. பாராசூட் டெஸ்ட்! வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ.. செம

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடு இந்தியா என்ற பெருமையை பெறும் வகையில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இதன்படி ககன்யான் திட்டத்தின் முக்கிய சோதனையான பாராசூட் சோதனை இன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

விண்வெளிக்கு சென்றுவிட்டு விண்கலம் பூமிக்கு திரும்பும் நேரத்தில், விண்கலத்தின் வேகத்தை குறைக்க உதவும் பாராசூட்களின் தகுதி, உறுதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மதிப்பிடும் நோக்கத்தில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

isro-successfully-completes-critical-drogue-parachute-tests-for-gaganyaan-mission

ககன்யான் திட்டம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம்தான் ககன்யான். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தின் படி, இந்திய விமானப்படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ககன்யான் திட்டத்திற்காக பல்வேறு சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சண்டிகரில் செயல்பட்டு வரும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் முக்கியமான சோதனையை நடத்தியது. இது ககன்யான் திட்டத்தின் மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

பாராசூட் சோதனை

இந்த பாராசூட் சோதனை எதற்காக என்ற கேள்வி எழலாம். அதாவது, ககன்யான் திட்டத்தின் படி, விண்வெளிக்கு சென்றுவிட்டு விண்கலம் பூமிக்கு திரும்பும் நேரத்தில், விண்கலத்தின் வேகத்தை குறைக்க உதவும் பாராசூட்களின் தகுதி, உறுதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மதிப்பிடும் நோக்கத்தில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப

ககன்யான் திட்டப்படி, இந்தியா தனது சொந்த விண்கலத்தைப் பயன்படுத்தி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது. விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பக் கொண்டு வருவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தியா இந்த சாதனையை மேற்கொள்ளும் பட்சத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

ககன்யான் திட்டப்படி, 2025-2026-ல் ஆளில்லா சோதனை பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. விண்வெளிக்கு முதல் மனிதப் பயணம் 2027-ஆம் ஆண்டு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்தியா விண்வெளி ஆய்வில் தன்னிறைவை எட்டும்.

வேகக் குறைப்பு அமைப்பு

விண்வெளியில் இருந்து மீண்டும் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்கலம் வரும். இதனை பாதுகாப்பாக அதன் வேகத்தை குறைத்து தரையிறக்குவதில் பாராசூட் முக்கிய பங்காற்றுகிறது. எனவேதான், ககன்யான் விண்கலத்தின் வேகக் குறைப்பு அமைப்பில் 4 வகையான 10 பாராசூட்கள் உள்ளன.

இந்த திட்டத்தின்படி, விண்ணில் இருந்து பூமிக்குள் விண்கலம் நுழைந்ததும் 2 பாராசூட்கள் விரியும். அதன்பிறகு 2 ட்ராக் பாராசூட்கள் விரிக்கப்படும். இதையடுத்து வேகம் படிப்படியாக குறைக்கும் நிகழ்வு தொடங்கும். அதன்பிறகு மூன்று பைலட் பாராசூட்கள் மற்றும் 3 பிரதான பாராசூட்கள் அடுத்தடுத்து திறக்கப்படும். இது விண்கலத்தின் வேகத்தை குறைக்க உதவும். இந்த ட்ராக் பாராசூட்கள்தான் பரிசோதிக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+