தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை.. சென்னை துரைப்பாக்கத்திலும் ரெய்டு
சென்னை: தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு, படூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் படூர், சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் நிறுவனம் என சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்துகிறது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை எம்ஜிஆர் நகர் சப்தகிரி காலனியில் உள்ள தனியார் நிறுவனம், சென்னை திநகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் உள்ள பந்தாரி நிறுவனம் போன்றவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications