தமிழகத்தில் மீண்டும் மெகா ஐடி ரெய்டு.. சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மொத்தம் 11 இடங்களில் மெகா ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மொத்தம் 11 இடங்களில் மெகா ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் வரிசையாக அடிக்கடி ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பல இடங்களில் தினமும் ஐடி ரெய்டு நடக்கிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் பிஎஸ்கே கட்டுமான துறை நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். அதேபோல் நாமக்கல்லில் பிஎஸ்கே கட்டுமான துறை நிறுவனத்திற்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் சென்னையில் 2 பைனான்சியர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மொத்தம் 11 இடங்களில் இந்த மெகா ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.
ஸ்வேதாவுக்கு பிட்டு போடறான் சஞ்சய்.. நிலா கூட வாழ்வானா?
தேர்தல் நேரத்தில் இவர்களிடம் கணக்கில் வராத கருப்பு பணம் புழங்குவதாக புகார் வந்ததை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. இன்று மேலும் சில இடங்களில் இதேபோல் ஐடி ரெய்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 500க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த 11 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த ஐடி ரெய்டு காரணமாக தற்போது தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.