சென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்?.. வானிலை மையம் விளக்கம்
சென்னை: சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி வருவது வடகிழக்கு பருவமழையின் தொடக்கம்தான் இந்த மழை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு பலனைக் கொடுக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வெப்பச்சலனத்தாலும் மேலடுக்கு சுழற்சியாலும் இந்த மழை பெய்து வருகிறது.

நல்ல மழை
அதிலும் இன்றைய தினம் சென்னையில் மாலை 4 மணி முதலே கருமேகங்கள் இருட்டிக் கொண்டு வந்தன. பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது. முகப்பேர், வளசரவாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, கிண்டி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம்
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் சென்னையில் ஒரு மணி நேரமாக பெய்து வரும் மழை முடிந்துவிட்டது. கடல் காற்று பூமி பக்கம் வீசியதால் இந்த மழை பெய்தது. அது போல் வெப்பச்சலனம் காரணமாகவும் இந்த மழை பெய்தது. இது போல் கனமழை வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக இருக்கலாம் என தெரிவித்தது.

ஸ்தம்பிப்பு
இந்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளால் தாக்கு பிடிக்க முடியாமல் சேதமடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்க முடியாமல் ஸ்தம்பித்தனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க வேண்டாம்
இன்னும் 24 மணி நேரத்தில் மேலும் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் வடக்கு வங்கக் கடல் மற்றும் வடமேற்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications