Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமோக வரவேற்பில் சிற்றுண்டி திட்டம்! தமிழக பள்ளி உணவு திட்டங்களின் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துடன் இன்று முதல் காலை உணவுத் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் இளம் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும்; கல்விதான் ஆகப் பெரும் சொத்து என்கிற நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Iyodhee Thass Pandithar launched Frist free meals scheme in Tamilnadu

1920-ம் ஆண்டு திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் சர்.பிட்டி தியாகராயர், தாம் சென்னை மேயராக இருந்த போது நகராட்சிப் பள்ளியில் அதிகாரப்பூர்வமாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுதான் தமிழக வரலாற்றில் ஒரு அரசு நிர்வாகம் மாணவர்களுக்கு முதன் முதலாக இலவச உணவு வழங்கிய திட்டமாகும்.

ஆனால் அதற்கு முன்னரே இத்தகைய ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் அயோத்திதாசப் பண்டிதர். 1892-ம் ஆண்டு சென்னையின் அடையாறு, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிகளை தொடங்கினார் அயோத்திதாச பண்டிதர். இதற்கு உறுதுணையான இருந்தவர் ஆங்கிலேயரான கர்னல் ஆல்காட். இவர்தான் பிரம்மஞான சபையை உருவாக்கியவர். சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் கீழ் இன்றும் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஆல்காட் குப்பம் என்பதும் இன்றளவும் அவரது பெயரை தாங்கி இருக்கிறது.

ஆங்கிலேயர் ஆல்காட் துணையுடன் அயோத்திதாசப் பண்டிதர் உருவாக்கிய இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பள்ளிகளில் 1894-ம் ஆண்டு முதல் 1909-ம் ஆண்டு வரை இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. இதன்பின்னர் 1920-ல் சர் பிட்டி.தியாகராயர் ஆயிரம் விளக்கு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் குறித்து அயோத்திதாசர் இப்படி குறிப்பிடுகிறார்.. " மத்தியானத்தில் பொசிப்பில்லா ஏழை சிறுவர்களுக்கு சிறுதிண்டியும் புசிப்புமளித்து வருவதுடன் அம்மை பால்மர் துரைசானியிருக்குமளவும் ஏழை சிறுபிள்ளைகளுக்கு வேண்டிய உடைகளுந்த் தைத்து உடுத்திவந்தார்கள் என்கிறார் அயோத்திதாசர். இப்பள்ளிகளில் 700க்கும் மேற்பட மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்.

இப்படி அன்று அயோத்திதாசப் பண்டிதரால் தொடங்கப்பட்டு சர்.பிட்டி தியாகராயாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் நாடு விடுதலைக்குப் பின்னர் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர்., ஜெயலலிதா என அனைத்து முதல்வர்களாலும் செழுமைப்படுத்தப்பட்டது. தற்போது இதன் உச்சமாகவே காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+