எப்ப போன் பண்ணாலும் எடுப்பார்.. கால் மிஸ்ஸே ஆனதில்லை.. ஜெ. அன்பழகனை நினைவு கூறும் மக்கள்
சென்னை: எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் மிஸ்டு காலாக செல்லாத ஜெ அன்பழகனின் எண் என அவரது சேவை மனப்பான்மையை நினைவுக்கூருகின்றனர்.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஜெ அன்பழகன். இவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவு
கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெ அன்பழகன் நடுவில் சில நாட்கள் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவர் 80 சதவீத செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சுவாசித்து வருவதாக மருத்துவமனை தெரிவித்தது. இதையடுத்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

உயிர் பிரிந்தது
இதனால்அவர் விரைவில் நலம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் இன்று காலை மோசமடைந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவரை ஸ்டாலின் சென்று மருத்துவமனையில் நேரில் பார்த்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் அவர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார்.

மென்மை
இதனால் திமுகவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக இருந்தவர். கருணாநிதியிடம் மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர் என்றும் அவரும் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக தோன்றினாலும் மிகவும் மென்மையானவர் என திமுகவினர் நினைவுகூர்கின்றனர்.

உழைப்பு
தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியது முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் வரை அவர் மக்களுக்காகவே உழைத்து கொண்டிருந்தார். தொகுதி மக்கள் தங்களுக்கு பிரச்சினை என கூறி அன்பழகனுக்கு போன் செய்தாலே போதும் அவர்களது பிரச்சினை தீர்ந்து விட்டதாகவே நினைத்துக் கொள்ளலாம். இதுவரை அவருக்கு போன் செய்து அந்த போன் மிஸ்டுகாலாக சென்றதே இல்லை என அவரது தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications