திருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை- ஜெ. தீபா பரபரப்பு முடிவு
Recommended Video

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் நானோ எனது கட்சியோ போட்டியிடவில்லை என ஜெ.தீபா பரபரப்பு முடிவை அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது ஆர் கே நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தையின் தொகுதியை கைப்பற்றியே தீருவேன் என களமிறங்கிய தீபா, வேட்புமனு தாக்கலிலேயே அவுட்டாகிவிட்டு களத்தை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் தங்கள் இருப்பை நிரூபிக்க போராடி வருகின்றன.
இதில் தீபா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. நெட்டிசன்களும் தீபா இன்னு்ம தூங்கிக் கொண்டிருக்கிறார், எப்போது விழித்துக் கொண்டு திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவார் என கிண்டலடித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தீபாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் திருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அதோடு என் கட்சியினரும் போட்டியிடவில்லை என்று பரபரப்பு தகவலை அறிவித்தார்.












Click it and Unblock the Notifications