சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மம்தா ஆட்சிக்கு நாட்கள் நெருங்கிடுச்சி.. துர்காதேவிதான் என்னை காத்தார்.. ஜே பி நட்டா

Google Oneindia Tamil News

சென்னை: துர்க்கையின் அருளால் நான் தப்பித்தேன் என்று மேற்கு வங்கத்தில் நடந்த கல்வீச்சு தாக்குதல் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சென்றார்.

டைமண்ட் ஹார்பருக்குச் சென்ற ஜே பி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கல்வீசி தாக்கினர். இதில் பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியா காயமடைந்தார்.

சித்ராவை சொந்த மகளாகவே நடத்தினோம்.. மகன் மீது அபாண்டமாக பழி.. ஹேம்நாத் பெற்றோர்சித்ராவை சொந்த மகளாகவே நடத்தினோம்.. மகன் மீது அபாண்டமாக பழி.. ஹேம்நாத் பெற்றோர்

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டாவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து நட்டா கூறுகையில் நான் பார்த்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியாகவே உள்ளது. இதற்கு முன் எப்போதும் இது போல் நடந்ததில்லை.

தாக்குதல்

தாக்குதல்

மேற்கு வங்கத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சகிப்புத்தன்மையும் இல்லை. மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது. இந்த தாக்குதலில் எனக்கு காயமே ஏற்படவில்லை. நான் குண்டு துளைக்காத காரில் பயணித்தேன்.

ஆசி

ஆசி

ஆனால் பாதுகாவலர்கள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என நினைத்து பாருங்கள். ஏதோ துர்காதேவியின் ஆசியால்தான் தற்போது நான் இந்த கூட்டத்தில் பேசுகிறேன்.

குண்டர்கள்

குண்டர்கள்

மாநிலத்தில் பாஜக கட்சித் தொண்டர்களின் பாதுகாப்பை நினைத்தால் எனக்கு கவலையாகவே இருக்கிறது. மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி எண்ணப்பட்டு வருகின்றன. இந்த குண்டர்களின் ஆட்சியை நாம் தோற்கடிப்போம்.

அரசியல் நாடகம்

அரசியல் நாடகம்

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் மிகவும் கீழான நிலைக்குச் சென்றுவிட்டது என்றார் நட்டா. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சுப்ரஜா முகர்ஜி கூறுகையில் அரசியல் நாடகங்களை அங்கேற்றி மக்களை பாஜக ஏமாற்றுகிறது. இந்த தாக்குதல் எல்லாம் பொய்யானவை, முன்பே திட்டமிட்டவை என்றார்.

English summary
BJP National President J.P.Nadda says that Durga Devi saved me from stone pelting by Trinamool Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X