"அவங்களை" "அப்படி" சொல்லக் கூடாது என சொல்வீகளா? ஜெய் ஶ்ரீராம் எங்கள் உரிமை: பாஜக நாராயணன் திருப்பதி
சென்னை: "ஜெய் ஸ்ரீராம்' என்பது அவரவரின் உரிமையே. இதில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை" என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ஜெய் ஶ்ரீராம் முழக்கம் எழுப்பப்பட்டது 'வெறுப்பேற்றும்' கோஷம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சித்தனர். இதனை பாஜக தலைவர்கள் தொடர்ந்து நியாயப்படுத்தி கருத்துகளையும் வாதங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஐயோ! பொது வெளியில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுகிறார்களே என்று பதை பதைத்து போகின்றார்கள் மத சார்பற்ற நல்லவர்கள் (?) சிலர்.
துணிவு உள்ளதா?: சரி! இனிமேல், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பொது வெளியில் தங்கள் கடவுள்கள் குறித்து எந்த கோஷங்களையோ, வழிபாடுகளையோ, பிரச்சாரங்களையோ மேற்கொள்ளக்கூடாது என்று சொல்ல துணிவு உள்ளதா? எந்த மதத்தையும் நாம் இழிவுபடுத்தவோ அல்லது எந்த மத சுதந்திரத்தையும் தடுக்கவோ கூடாது, முடியாது. அது தான் மத சார்பற்ற தன்மை.
ஐயோ! பொது வெளியில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுகிறார்களே என்று பதை பதைத்து போகின்றார்கள் மத சார்பற்ற நல்லவர்கள் (?) சிலர்.
— Narayanan Thirupathy (@narayanantbjp) October 16, 2023
சரி! இனிமேல், இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்துவர்கள் பொது வெளியில் தங்கள் கடவுள்கள் குறித்து எந்த கோஷங்களையோ, வழிபாடுகளையோ, பிரச்சாரங்களையோ மேற்கொள்ளக்கூடாது…
அவங்க நிறுத்துவாங்களா?: மாற்று மதத்தினரை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லக்கூடாது என்றால், இனி ஹிந்துக்களின் எதிரில் 'அல்லாஹு அக்பர்' என்றோ, 'இயேசு அழைக்கிறார்' என்றோ சொல்லக்கூடாது என்று கோரிக்கை விடுப்பார்களா? அல்லாஹூ அக்பர் என்றும், இயேசு கிறிஸ்து என்றும் சொல்வது அவரவர் உரிமை என்றால் 'ஜெய் ஸ்ரீராம்' என்பதும் அவரவரின் உரிமையே. இதில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை. இவ்வாறு நாராயணன் திருப்பதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் ஜெய் ஶ்ரீராம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அதிரடியாக, 10 முறை ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்டு இதுதான் ஒற்றை வரி பதில் என கூறினார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.












Click it and Unblock the Notifications