முழு வீச்சில் மதுரை ஜல்லிக்கட்டு ஏற்பாடு.. முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார்.. அமைச்சர் மூர்த்தி
சென்னை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 12,176 காளைகளும், 4,514 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளார்கள் என்றும் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
வருகிற 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கலில் ஜல்லிக்கட்டு போட்டியும் பிரபலமானது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறிப்பாக மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:- பொங்கலை முன்னிட்டு வருகிற 15 ,16 மற்றும் 17 ஆம் தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முனைப்போடு இதனை செய்து வருகிறது. 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இதற்கு நேற்று மதியம் 12 மணியில் இருந்து இன்று மதியம் 12 மணி வரையிலும் ஜல்லிக்கட்டு மாடுகளையும் மாடுபிடி வீரர்களையும் பதிவு செய்யும் பணி நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏறத்தாழ 12,176 காளைகளும், அதில் கலந்துகொள்ள கூடிய மாடுபிடி வீரர்கள் 4,514 பேரும் கலந்துகொள்ள பதிவு செய்திருக்கிறார்கள்.
அலங்காநல்லூரில் கலந்துகொள்ள கூடிய மாடுகளின் எண்ணிக்கை 6,099. இதேபோல் பாலமேட்டில் 3,677 காளைகளும், அவனியாபுரத்தில் 2,400 காளைகளும் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதேபோல் வீரர்களை பொறுத்தவரை அவனியாபுரத்தில் 1,318 பேரும், பாலமேட்டில் 1,412 பேரும், அலங்காநல்லூரில் 1284 பேர் என தனித்தனியாக பதிவு செய்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications