முழு வீச்சில் மதுரை ஜல்லிக்கட்டு ஏற்பாடு.. முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார்.. அமைச்சர் மூர்த்தி
சென்னை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 12,176 காளைகளும், 4,514 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளார்கள் என்றும் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
வருகிற 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கலில் ஜல்லிக்கட்டு போட்டியும் பிரபலமானது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறிப்பாக மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:- பொங்கலை முன்னிட்டு வருகிற 15 ,16 மற்றும் 17 ஆம் தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முனைப்போடு இதனை செய்து வருகிறது. 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இதற்கு நேற்று மதியம் 12 மணியில் இருந்து இன்று மதியம் 12 மணி வரையிலும் ஜல்லிக்கட்டு மாடுகளையும் மாடுபிடி வீரர்களையும் பதிவு செய்யும் பணி நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏறத்தாழ 12,176 காளைகளும், அதில் கலந்துகொள்ள கூடிய மாடுபிடி வீரர்கள் 4,514 பேரும் கலந்துகொள்ள பதிவு செய்திருக்கிறார்கள்.
அலங்காநல்லூரில் கலந்துகொள்ள கூடிய மாடுகளின் எண்ணிக்கை 6,099. இதேபோல் பாலமேட்டில் 3,677 காளைகளும், அவனியாபுரத்தில் 2,400 காளைகளும் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதேபோல் வீரர்களை பொறுத்தவரை அவனியாபுரத்தில் 1,318 பேரும், பாலமேட்டில் 1,412 பேரும், அலங்காநல்லூரில் 1284 பேர் என தனித்தனியாக பதிவு செய்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications