முழு வீச்சில் மதுரை ஜல்லிக்கட்டு ஏற்பாடு.. முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார்.. அமைச்சர் மூர்த்தி
சென்னை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 12,176 காளைகளும், 4,514 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளார்கள் என்றும் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
வருகிற 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கலில் ஜல்லிக்கட்டு போட்டியும் பிரபலமானது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறிப்பாக மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:- பொங்கலை முன்னிட்டு வருகிற 15 ,16 மற்றும் 17 ஆம் தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முனைப்போடு இதனை செய்து வருகிறது. 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இதற்கு நேற்று மதியம் 12 மணியில் இருந்து இன்று மதியம் 12 மணி வரையிலும் ஜல்லிக்கட்டு மாடுகளையும் மாடுபிடி வீரர்களையும் பதிவு செய்யும் பணி நடந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏறத்தாழ 12,176 காளைகளும், அதில் கலந்துகொள்ள கூடிய மாடுபிடி வீரர்கள் 4,514 பேரும் கலந்துகொள்ள பதிவு செய்திருக்கிறார்கள்.
அலங்காநல்லூரில் கலந்துகொள்ள கூடிய மாடுகளின் எண்ணிக்கை 6,099. இதேபோல் பாலமேட்டில் 3,677 காளைகளும், அவனியாபுரத்தில் 2,400 காளைகளும் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதேபோல் வீரர்களை பொறுத்தவரை அவனியாபுரத்தில் 1,318 பேரும், பாலமேட்டில் 1,412 பேரும், அலங்காநல்லூரில் 1284 பேர் என தனித்தனியாக பதிவு செய்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications