இபிஎஸ் ஒரு எளியத் தலைவர்! பந்தா இல்லாத மனிதர்! ஓபிஎஸ் ஸை எளிதாக யாரும் பார்க்க முடியாது -ஜெமீலா
சென்னை: எடப்பாடி பழனிசாமியை போல் ஒரு எளியத் தலைவரை இதுவரை தாம் பார்த்ததில்லை என அதிமுக பிரமுகர் ஜெமீலா தெரிவித்துள்ளார்.
அமமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளராக இருந்து கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார்.
இதனிடையே அதிமுகவில் செய்தித் தொடர்பாளர் பதவியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு முக்கியப் பதவியோ விரைவில் இவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் அவர் பேசுகையில்,

பிரச்சனை இல்லை
''அதிமுகவில் ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. ஜனநாயக முறைப்படி கட்சிக்கு தலைமை தேர்வு செய்யப்படுகிறது. இது வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத ஒன்று. தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தான் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும். எடப்பாடி பழனிசாமியை தான் 95% தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆதரிக்கிறார்கள். இதனால் அவர் தான் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும்.''

எளியத் தலைவர்
''இன்னொன்று உங்களிடம் சொல்ல வேண்டும், எடப்பாடி பழனிசாமியை போல் ஒரு எளிய தலைவரை தற்போதைய காலகட்டத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை அணுகி தங்களின் குறைகள், கோரிக்களை தெரிவிக்கலாம். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை அப்படி எளிதாக யாரும் சந்தித்து விட முடியாது. அய்யா பிஸியாக இருக்கிறார் என்று தான் பதில் வரும். ஆனால் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை தொண்டர்களை சந்திப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்.''

அடுத்த லெவல்
''கட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என நினைக்கிறார் இபிஎஸ். புதுமுகங்களை வளர்த்துவிட வேண்டும் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் தான் இப்போது அவர் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான தொண்டர்களின் உணர்வை புரிந்து ஓபிஎஸ் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.''
Recommended Video

அதிமுக பொதுக்குழு
''நான் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இல்லை. சிறப்பு அழைப்பாளர்களுக்கு கடந்த பொதுக்குழுவில் அழைப்பு இல்லை என்பதால் நான் செல்ல முடியவில்லை. ஆனாலும் கட்சியின் சாதாரண தொண்டர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கே எனது ஆதரவு.''
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications