தமிழகத்தில் திமுக மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.. ஜன்கிபாத் எக்சிட் போல் 2021
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியே அமையும் என இந்தியா டிவி- ஜன்கிபாத் எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
Recommended Video
தமிழகத்தில் நடந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்கு பின்னர் நடந்த முதல் சட்டசபைத் தேர்தல் இதுவாகும். எனவே எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 234 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வரும் மே 2 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியா டிவி ஜன்கிபாத் நடத்திய கருத்து கணிப்பில் திமுக 110 முதல் 130 இடங்களிலும் அதிமுக 102 முதல் 123 இடங்களிலும் வெல்லும் என தெரிவித்துள்ளது.
இதர கட்சிகள் 1 முதல் 2 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. இந்த நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் திமுக அதிமுக இடையே நெக் டூ நெக் போட்டி நிலவும் என்றே சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications