ஜனநாயகன் படத்திற்கு இன்று மாலை சென்சார் வழங்கப்படுகிறதா? எப்போது ரிலீஸ்!
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பாக இன்று மாலை தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சென்சார் போர்டு ரிவைஸிங் கமிட்டி மீண்டும் பார்க்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளானது.

தணிக்கை வாரிய மறுஆய்வுக்குழுவின் பரிசீலனையில் இருந்தபோதே, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீஸார் மூவர் வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 'ஜனநாயகன்' பட எடிட்டிங் ஸ்டுடியோவின் உதவி எடிட்டரே கசிவுக்குக் காரணம் என சைபர் க்ரைம் குற்றம்சாட்டியுள்ளது.
உமா சங்கர் தன் மனுவில், "எனக்கும் திரைத்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க போலீஸார் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்," எனக் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், உமா சங்கர்தான் முக்கியக் குற்றவாளி எனவும், அவரே படத்தை வெளியிட்டார் எனவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். படம் கசிந்த மறுநாளே உமா சங்கர் இதயப் பிரச்சனை எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
கைதானவர்கள் அளித்த வாக்குமூல அடிப்படையில் உமா சங்கர் சேர்க்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். நீதிபதி சி.குமரப்பன் விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் இந்த படத்தை சென்சார் போர்டு ரிவைஸிங் கமிட்டியை சேர்ந்த 2 பேர் இன்று பிற்பகல் மீண்டும் பார்க்கிறார்கள். படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இன்று மாலை தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை இன்று மாலை சென்சார் கிடைத்துவிட்டால் வரும் வியாழக்கிழமை வெளியிட வாய்ப்புள்ளது. தற்போது கோடை விடுமுறை, மேலும் மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.













Click it and Unblock the Notifications