கூடங்குளத்தில் கூடுதல் அணு உலை? பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடு பலியாவதை ஏற்க முடியாது! -ஜவாஹிருல்லா
சென்னை: கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்திய ரஷ்யா நாடுகள் ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் உள்ள இந்திய மக்களுடனான கூட்டத்தில் டிசம்பர் 26 அன்று உரையாடிய போது " என் முன்னிலையிலும், துணைப் பிரதமர் மன்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அணு உலைகளோ அல்லது வர்த்தக ரீதியிலான ஈனுலைகளோ தொடங்கப்பட்டால் அது அந்த பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். 2018ல் குஜராத் மாநிலத்திலும் கர்நாடக மாநிலம் கோலார் தங்க சுரங்கத்தில் அணுக்கருவிகளை பாதுகாக்க முடிவெடுத்த போதும் அம்மாநிலங்களில் ஆட்சி செய்த பாஜக அதனைக் கடுமையாக எதிர்த்ததோடு அத்திட்டங்களை நிறுத்தியும் வைத்தது.
ஆனால் தமிழ்நாட்டில் அணு உலைகளையும் அணுக்கழிவு மையத்தையும் மேலும் மேலும் உருவாக்கி வருவது கவலை அளிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களும் மக்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இவற்றையெல்லாம் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவே இல்லை.
தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகவே ஒன்றிய அரசு செயல்பட்டு வருவது புலனாகிறது. ஒன்றிய பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் தூத்துக்குடியில் பெய்த பெருமழை கால நிலை மாற்றத்தின் தீவிரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ள நிலையில் புதிய உலைகளை அமைக்கும் முயற்சி சூழலியலுக்கு எதிரானது.
கூடங்குளத்தில் புதிய அணு உலைகளையும் அணுக்கழிவு மையங்களையும் அமைக்கும் முடிவை அந்த பகுதி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கடுமையாக எதிர்ப்பார்கள். ஒன்றிய அரசின் தமிழர் விரோத போக்கை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கு மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications