Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”ஜெயலலிதாவின் வரி பாக்கியை சரியாக சொன்னால் செலுத்த தயார்”.. உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா தரப்பு பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ​மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித்​தொகை எவ்​வளவு என்பது குறித்து சரியான தொகையை தெரிவித்தால், அதை செலுத்த தயாராக இருப்பதாக ஜெ. தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வரு​மான வரித்​துறை வரும் ஜன.12-க்​குள் பதில்​ மனு தாக்கல் செய்ய உயர்நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா பாக்​கி​யாக வைத்​துள்ள ரூ.36.56 கோடி வரு​மான வரியை 7 நாட்​களுக்​குள் செலுத்த வேண்​டும் என அவரது சட்​டப்​பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்​றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு வரு​மான வரித்​துறை கடந்த ஜூலை 23 அன்று நோட்​டீஸ் அனுப்​பியது.

Jayalalitha J Deepa High court

இதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து வருமான வரித்துறையின் நோட்​டீஸுக்கு தடை உத்​தரவு பெற்​றார். அதையடுத்து அந்த நோட்​டீஸை திரும்​பப் பெற்ற வரு​மான வரித்​துறை ரூ. 13.69 கோடியை செலுத்​தும்​படி புதி​தாக நோட்​டீஸ் அனுப்​பியது.

சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இந்த வழக்​கில் ஜெ.தீபக்​கும் இணைந்​தார். கடந்த முறை இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த போது நிலு​வைத் தொகை​யில் தனது பங்​குத்​தொகையை தவணை முறை​யில் செலுத்தி வரு​வ​தாக ஜெ.தீபக் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி சி.சர​வணன் முன்​பாக நேற்று மீண்​டும் விசாரணைக்கு வந்​தது. அப்​போது ஜெ.தீபா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்​.சத்தி​யகு​மார், "ஏற்​கெனவே ஜெயலலிதா வரு​மான வரி பாக்கி தொடர்​பான வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி எனக்​கூறிய வரு​மான வரித்​துறை, அதன்​பிறகு ரூ.36 கோடி கட்ட வேண்​டும் எனக்​கூறியது. தற்​போது ரூ.13.69 கோடி எனக் கூறுகிறது.

வரு​மான வரித்​துறை​யின் இந்த கணக்​கீடு முற்​றி​லும் தவறானது என்​பது தான் எங்​கள் தரப்பு வாதம். நிலுவை வரி தொடர்​பாக தெளி​வான எந்த விளக்​கத்​தை​யும் வரு​மான வரித்​துறை தெரிவிக்​க​வில்​லை. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருக்கிறோம்" என வாதம் வைத்தார்.

ஜெ.தீபக் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஏ.எல்​.சுதர்​சனம், "எங்​களது பங்​களிப்​புத் தொகையை தவணை முறை​யில் செலுத்தி வரு​கிறோம்" என்​றார். வரு​மான வரித்துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஜெ.பிர​தாப், "தற்​போது வரு​மான வரி பாக்​கி​யாக ரூ.13.69 கோடி உள்​ளது. இதில் தனது பங்​குத் தொகையை தீபக் செலுத்தி வரு​வ​தால், தீபா செலுத்த மாட்​டேன் எனக் ​கூற முடி​யாது" எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், யாரும் எந்த சிறப்பு சலுகையும் கோர முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, எவ்வளவு வரி பாக்கி செலுத்த வேண்டும் என கணக்கு விவரங்களை சரிபார்த்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

அதையடுத்து நீதிப​தி, "மறைந்த முன்​னாள் முதல்​வ​ரான ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித் தொகை எவ்​வளவு என்​பது குறித்து விளக்​க​மான பதில் மனுவை வரு​மான வரித்​துறை தாக்​கல் செய்ய வேண்​டும்" என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை வரும்​ ஜனவரி 12 ஆம் தேதிக்​கு தள்​ளி வைத்​தார்​.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+