ரூ 2000 த்துடன் நகைக் கடைக்கு படையெடுப்பு.. டபுள் அதிர்ச்சி வைத்தியத்தால் மக்கள் அவதி
சென்னை: ரூ 2000 வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் அந்த நோட்டுகளை நகைக்கடைகளில் மாற்ற மக்கள் படையெடுத்த நிலையில் நகைக்கடைகளோ அதை வாங்க மறுத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ 500, ரூ 1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இந்த சமயத்தில் அந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையடுத்து மக்கள் வங்கி வாயில்களில் காத்திருந்தனர்.

இதிவ் சிலர் மரணம் கூட அடைந்தனர். இந்த தினத்தை எதிர்க்கட்சிகள் கருப்பு தினம் என அழைத்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரூ 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
நாளை முதல் வங்கிகளில் ரூ 2000 நோட்டுகளை கொடுத்து உங்கள் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அந்த 2000 நோட்டுகளுக்கு பதில் வேறு ஒரு நோட்டை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ 20000 மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை மட்டுமே மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் ரூ 2000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுவாக ரூ 500, ரூ 2000 ஆகியவற்றுக்கு சில்லறை கொடுக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட ரூ 2000 வாங்கப்படாது என போர்டு வைத்துள்ளார்கள். அது போல் பேருந்துகளிலும் வாங்கப்படாது என சில போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்துள்ளன.
ஆம்னி பேருந்துகளிலும் ரூ 2000 வாங்கப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வங்கி வாசல்களில் கால் கசடுக்க நிற்பதற்கு பதிலாக நகைக்கடைகளில் ரூ 2000 த்தை கொடுத்து நகை வாங்கலாம் என முடிவு செய்து நகைக் கடைகளுக்கு சென்று ஆசை ஆசையாக நகைகள வாங்கிவிட்டு பில் போடும் போதுதான் தெரிகிறது ரூ 2000 நோட்டுகள் வாங்கப்படாது என்று!
இதனால் சிலர் நகைகளை கார்டு வாங்குகிறார்கள். சிலர் நகைக் கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். சில கடைகளில் ரூ.2000 நோட்டுகளை கொண்டு தங்கம் வாங்கினால் சில நகைக்கடைகளில் வழக்கமான விலையை விட 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக விலைக்கு தங்கத்தை விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரூ 2000 செல்லாது என மத்திய அரசு அறிவித்தாலும் அறிவித்தது, அந்த நோட்டுகளை மாற்ற மக்கள் படாதபாடுபடுகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications