நடிகை சீதா வீட்டில் நடந்த நகை திருட்டு.. விசாரணையில் இறங்கியது சென்னை போலீஸ்!
சென்னை: நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகை திருடு போனது தொடர்பாக நடிகை சீதா புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சீதாவின் வீட்டில் இருந்து இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை. அதை யாரோ திருடி உள்ளார்கள். எனவே காணாமல் போன எனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தரவேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார் சீதா.
இந்த நிலையில், நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகையை திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான, பாண்டியராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான, 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சீதா. தனது முதல் படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சீதா.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சீதாவுக்கு, அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான சீதா, 80களில் ஏராளமான படங்களில் நடித்தார்.
பின்னர், நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சீதா. பத்து ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். அதைத்தொடர்ந்து எங்கும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த சீதா, சீரியல்களில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications