நடிகை சீதா வீட்டில் நடந்த நகை திருட்டு.. விசாரணையில் இறங்கியது சென்னை போலீஸ்!
சென்னை: நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகை திருடு போனது தொடர்பாக நடிகை சீதா புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சீதாவின் வீட்டில் இருந்து இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை. அதை யாரோ திருடி உள்ளார்கள். எனவே காணாமல் போன எனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தரவேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார் சீதா.
இந்த நிலையில், நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகையை திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான, பாண்டியராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான, 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சீதா. தனது முதல் படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சீதா.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சீதாவுக்கு, அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான சீதா, 80களில் ஏராளமான படங்களில் நடித்தார்.
பின்னர், நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சீதா. பத்து ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். அதைத்தொடர்ந்து எங்கும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த சீதா, சீரியல்களில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications