மாமனார், மாமியார், கணவர்.. குடும்பமே பதவி சுகத்தை அனுபவிச்சிட்டு.. நிர்மலா மீது ஜோதிமணி பாய்ச்சல்
நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி ட்விட்டரில் பதில் தந்துள்ளார்.
Recommended Video

சென்னை: "மேடம்... மாமனார், மாமியார், கணவர்னு குடும்பமே பல கட்சியில் பதவியை அனுபவிச்சுட்டு.. கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது" என்று நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி பதிலடி தந்துள்ளார்
உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மனதார பாராட்டும், சில தலைவர்கள் வாழ்த்து சொல்வது போல் இழித்தும், பழித்தும் வருகிறார்கள்.
சில தலைவர்கள் பகிரங்க கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரியங்காவின் அரசியல் வருகை பற்றி கருத்து சொன்னார்.

குடும்ப அரசியல்
அப்போது ''காங்கிரஸ் கட்சியில் திறமை மிக்கவர்கள் நிறைய பேர் இருந்தும் அவர்களுக்கு பொறுப்புகள் தராமல், வழங்காமல் பிரியங்கா காந்திக்கு தந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார். குடும்ப அரசியல் என்ற நிர்மலா சீதாராமனின் விமர்சனத்துக்கு காங்கிரசின் ஜோதிமணி பதிலடி தந்துள்ளார்.

மாமனார், மாமியார்
இது சம்பந்தமான தனது ட்வீட்டில், "பஞ்சாயத்து, வட்டம், மாவட்டம்னு பிஜேபியில் கீழ்மட்டத்திலிருந்து கடுமையா உழைச்சு மந்திரியான மாதிரி பேசக்கூடாது. மாமனார், மாமியார், கணவர்னு குடும்பமே பல கட்சியில் பதவியை அனுபவித்தவர்கள். அந்தப் பின்னணியில் திடீர்னு உயர்பதவிக்கு வந்துவிட்டு கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிய வேண்டாம் மேடம்!" என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.
|
வைரல் ட்வீட்
இங்கிருக்கும் தமிழிசையையே ட்வீட் போட்டு கலங்கடிக்கும் ஜோதிமணி, நிர்மலா சீதாராமனை விட்டு விடுவாரா என்ன? தைரியமாகவும், துணிச்சலாகவும், உண்மையை சொல்லி பதிவிட்ட ஜோதிமணியின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

பரகலா சேஷவரதாரம்
ஆனால் உண்மையிலேயே நிர்மலா சீதாராமனின் குடும்பம் அரசியல் பின்னணியை உடையதுதான். இவரது கணவர் பரகலா பிரபாகர், ஆந்திர அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றியவர். மாமனார் பரகலா சேஷவரதாரம் ஆந்திர காங்கிரசில் பலமுறை அமைச்சராக பதவி வகித்தவர். மாமியார் காளிகாம்பாவும் ஆந்திர மாநில எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். இத்தனை பின்னணியை நாடே பார்க்கும்படி வைத்துக் கொண்டு, எதற்காக பிரியங்காவை மட்டும் குடும்ப அரசியல் என்று சொல்கிறார் என்றுதான் நமக்கு தெரியவில்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications