பராசக்தி படம் பார்த்த மகனின்.. பதிலை கேட்டு அவமானப்பட்டேன்! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: பராசக்தி படத்தை என் மகனுடன் சேர்ந்து பார்த்தேன். அப்போது அவரிடம், தமிழகத்தில் நடந்த மொழி போராட்டம் குறித்து தெரியுமா என கேட்டேன். அதற்கு என் மகன் தெரியாது என பதில் சொன்னபோது அவமானப்பட்டேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்தார்.
சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி நிறைவு விழா சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.

அப்போது மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச் சுற்று , நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்தது.
இந்த இறுதி போட்டிக்கு பிறகு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். அவர் பேசுகையில், மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்தவையாக குண்டூசி, சக்கரம், மின்சாரம், மொழி ஆகியவை. முதலிடத்தில் உள்ள மொழி என்பது தனி மனிதன் கண்டுபிடித்தது இல்லை.
ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாபெரும் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் உள்ள 6000 மொழிகளில் மொழிகளுக்கான எழுத்துகளை கொண்டவை 200- கூட இருக்காது. அவற்றில் 120- 130 மொழிகளுக்கு சொந்த எழுத்து கிடையாது.
அதிலும் 1000 ஆண்டுகளை கடந்த மொழிகள் 10 மட்டுமே இருக்கும். அப்படி ஆயிரம் 1000 ஆண்டுகளை தாண்டாத அங்கலத்தை பேசி பெருமைப்படுத்துகிறோம். 2000 ஆண்டுகளை கடந்தவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி.
இதில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் என்பது மனிதன் கடவுளிடம் பேசும் ஒரு மொழி. அதாவது சாமியும் சாமியும் பேசிக் கொள்ளும் அந்த மொழி நடைமுறையில் பேச்சு வழக்கில் இல்லை.
பேச்சு வழக்கில் 2000 ஆண்டுகளை கடந்து இருப்பவை சீன மொழி, தமிழ் மொழி என சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம். கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கிற ஒரே மொழி தமிழ்தான் என நிரூபணமாகியுள்ளது.
ஒரு மொழியில் இலக்கணம் உரைநடையில் இருக்கும். ஆனால் தமிழில் மட்டும் இலக்கணமும் கவிதை வடிவில் இருக்கும். திருக்குறளில் எந்த அரசனையும் தூக்கிப்பிடிக்கவில்லை, இறைவனை உயர்த்திப் பிடிக்கவில்லை, எந்த மதத்துக்கும் சார்பாக இல்லாமல் எந்த சமய சாயத்தையும் தான் மீது பூசிக்கொள்ளாமல் அகில உலக மாந்தர் குலத்தின் செழுமைமிக்க பாடப்பட்ட பொதுமுறை நூல் திருக்குறள்.
தமிழன் எந்த மொழியையும் திணிக்கவில்லை. மாறாக விரும்பி படிக்கிறான். வேற்று மொழியை திணித்தால் ஏற்க மாட்டேன். மொழிப் போராட்டம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பராசக்தி படத்தை பார்த்துவிட்டு தமிழகத்தில் நடந்த மொழி போராட்டம் நடந்தது தெரியுமா என என் மகனிடம் கேட்டேன்.
"தெரியாது" என சொன்ன என் மகனின் பதிலை கேட்டு நான் மிகவும் அவமானப்பட்டேன். மொழி போராட்டத்தை சொல்லிக் கொடுக்காமல் கடமையில் இருந்து தவறிவிட்டேன் என கருதினேன். அது நாம் அனைவருக்கும் கட்டாயம் தெரிய வேண்டும். இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications