Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பராசக்தி படம் பார்த்த மகனின்.. பதிலை கேட்டு அவமானப்பட்டேன்! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பராசக்தி படத்தை என் மகனுடன் சேர்ந்து பார்த்தேன். அப்போது அவரிடம், தமிழகத்தில் நடந்த மொழி போராட்டம் குறித்து தெரியுமா என கேட்டேன். அதற்கு என் மகன் தெரியாது என பதில் சொன்னபோது அவமானப்பட்டேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்தார்.

சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி நிறைவு விழா சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.

Justice Anand Venkatesh

அப்போது மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச் சுற்று , நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்தது.

இந்த இறுதி போட்டிக்கு பிறகு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். அவர் பேசுகையில், மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்தவையாக குண்டூசி, சக்கரம், மின்சாரம், மொழி ஆகியவை. முதலிடத்தில் உள்ள மொழி என்பது தனி மனிதன் கண்டுபிடித்தது இல்லை.

ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாபெரும் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் உள்ள 6000 மொழிகளில் மொழிகளுக்கான எழுத்துகளை கொண்டவை 200- கூட இருக்காது. அவற்றில் 120- 130 மொழிகளுக்கு சொந்த எழுத்து கிடையாது.

அதிலும் 1000 ஆண்டுகளை கடந்த மொழிகள் 10 மட்டுமே இருக்கும். அப்படி ஆயிரம் 1000 ஆண்டுகளை தாண்டாத அங்கலத்தை பேசி பெருமைப்படுத்துகிறோம். 2000 ஆண்டுகளை கடந்தவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி.

இதில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் என்பது மனிதன் கடவுளிடம் பேசும் ஒரு மொழி. அதாவது சாமியும் சாமியும் பேசிக் கொள்ளும் அந்த மொழி நடைமுறையில் பேச்சு வழக்கில் இல்லை.

பேச்சு வழக்கில் 2000 ஆண்டுகளை கடந்து இருப்பவை சீன மொழி, தமிழ் மொழி என சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம். கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கிற ஒரே மொழி தமிழ்தான் என நிரூபணமாகியுள்ளது.

ஒரு மொழியில் இலக்கணம் உரைநடையில் இருக்கும். ஆனால் தமிழில் மட்டும் இலக்கணமும் கவிதை வடிவில் இருக்கும். திருக்குறளில் எந்த அரசனையும் தூக்கிப்பிடிக்கவில்லை, இறைவனை உயர்த்திப் பிடிக்கவில்லை, எந்த மதத்துக்கும் சார்பாக இல்லாமல் எந்த சமய சாயத்தையும் தான் மீது பூசிக்கொள்ளாமல் அகில உலக மாந்தர் குலத்தின் செழுமைமிக்க பாடப்பட்ட பொதுமுறை நூல் திருக்குறள்.

தமிழன் எந்த மொழியையும் திணிக்கவில்லை. மாறாக விரும்பி படிக்கிறான். வேற்று மொழியை திணித்தால் ஏற்க மாட்டேன். மொழிப் போராட்டம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பராசக்தி படத்தை பார்த்துவிட்டு தமிழகத்தில் நடந்த மொழி போராட்டம் நடந்தது தெரியுமா என என் மகனிடம் கேட்டேன்.

"தெரியாது" என சொன்ன என் மகனின் பதிலை கேட்டு நான் மிகவும் அவமானப்பட்டேன். மொழி போராட்டத்தை சொல்லிக் கொடுக்காமல் கடமையில் இருந்து தவறிவிட்டேன் என கருதினேன். அது நாம் அனைவருக்கும் கட்டாயம் தெரிய வேண்டும். இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+