நீதிபதி சுவாமிநாதன் விரைவில் தேர்தலில் நிற்பார்.. திருப்பரங்குன்றம் கேசில்.. வைக்கப்பட்ட பரபர வாதம்
சென்னை: நீதிபதி சுவாமிநாதன் விரைவில் அரசியலுக்குள் வருவார், நீதிபதி சுவாமிநாதன் விரைவில் தேர்தலில் நிற்பார் என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் பரபரப்பு வாதம் வைத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கில் முக்கியமான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற இருவர் பெஞ்ச் அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இன்று அனைத்து தரப்பு வாதங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று 2 தரப்பு அமர்வு குறிப்பிட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அனைத்து மேல்முறையீடுகளும் நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளன.
மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்
திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். அதில் .திருப்பரங்குன்றம் வழக்கில் சூழ்நிலை எவ்வளவு துரதிஷ்டமானது என்பதை கோர்ட் விரைவில் உணரும்.
நீதிபதி சுவாமிநாதன் விரைவில் அரசியலுக்குள் வருவார். நீதிபதி சுவாமிநாதன் விரைவில் தேர்தலில் நிற்பார். நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை பற்றி நான் பேசவிரும்பவில்லை. ஆனால் நீதிபதி சுவாமிநாதன் அரசியலமைப்புப்படி செயல்பட்டுள்ளாரா என்ற கேள்வி உள்ளது, என்று பரபரப்பு வாதம் வைத்துள்ளது.
நீதிபதி சுவாமிநாதன்
முன்னதாக தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவைச் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் , விளக்கு ஏற்றுவதன் நோக்கம். ஆனால் அதை தீபத்தூண் மீதுதான் ஏற்ற வேண்டும் என்கிறார்கள். அங்கே ஏற்றிய வழக்கமே இல்லை.
தீபத்தூண் என்ற சொல் ரிட் மனுதாரர்களின் அசல் கோரிக்கையிலோ அல்லது முந்தைய வழக்குகளிலோ ஒருபோதும் இல்லை என சிங் வாதிட்டார். இந்தக் கருத்து நீதிமன்றத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது, வழக்கில் தொடர்புடைய தரப்பினரால் எழுப்பப்படவில்லை என்றார்.
தீபத்தூண் வார்த்தையே இல்லை
இந்த தூணுக்கு செல்லப்படும் இடத்திற்கு படிகள் வழியாக செல்ல வேண்டும். இந்த படிகள் இஸ்லாமிய சொத்துக்குரியவை. ஆனால் தனி நீதிபதி அதை கருத்தில் கொள்ளவில்லை. அருகிலுள்ள தர்காவின் உரிமைகளைப் பாதிக்காமல் விளக்கை ஏற்ற முடியுமா என்பதை உத்தரவு கருத்தில் கொள்ளவில்லை என்றும் வாதிட்டார்.
பொது ஒழுங்கை மதிப்பிடவும் பராமரிக்கவும் மாநிலமே சிறந்த அதிகாரம் கொண்ட அமைப்பு. அரசு தனது கடமையில் தவறினால், நீதிமன்றம் தலையிட்டு பொது ஒழுங்கைப் பாதுகாக்கலாம். நீதிபதி உத்தரவால் பொதுஒழுங்கு கெட்டுவிட்டது. அவரின் உத்தரவால் பொது அமைதிக்கு பதிலாக.. சூழ்நிலை மோசமாகி உள்ளது., என்று வாதம் வைத்தார்.
இதற்கு நீதிபதி ஜெயசந்திரன், நீங்கள் இதை கோர்ட்டில் கூறினார்களா? நீதிபதியிடம் இதை பற்றி கூறினீர்களா?, என்று கேட்டார். இதற்கு சிங், எங்களுடைய பல வாதங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
விளக்கு ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டால், லட்சக்கணக்கானோர் அந்த குறுகிய படிகளைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இத்தகைய நிலைமை கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கும். ஒரு குறிப்பிட்ட அனுமதி கூட, இயற்கையாகவே ஏராளமான பக்தர்களை மலைக்கு ஈர்க்கும் எனவும் அவர் வாதிட்டார்.
தனி நீதிபதி லட்சக்கணக்கான மக்களை மலைக்குச் செல்ல உத்தரவிடவில்லை என நீதிமன்றம் பதிலளித்தது. அந்த உத்தரவு, கோயில் நிர்வாகிகளை விளக்கு ஏற்றுமாறு மட்டுமே அறிவுறுத்தியதாக தெளிவுபடுத்தியது.
ஆனால், விளக்கு ஏற்றப்படுவதை ஒரு சைகையாகக் கருதி, நடைமுறையில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவார்கள் என சிங் மறுத்துரைத்தார். இதுவொரு பெரிய நடைமுறைச் சவால் என்றார். இந்த வழக்கில் தொடர்ந்து தீவிரமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
-
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு












Click it and Unblock the Notifications