எழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுத்தது மகிழ்ச்சி.. கே.பாக்யராஜ்
Recommended Video

சென்னை: திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் கூட ஒரு எழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.
தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார் கே. பாக்யராஜ். சர்கார் படக் கதை விவகாரம் தொடர்பாக எழுந்த அடுத்தடுத்த நிகழ்வுகளே அவர் பதவி விலக முக்கியக் காரணம்.

[சர்கார் விவகாரத்திற்கு பிறகு அசவுகரியம், ஒழுங்கீனத்திற்கு ஆளானேன்.. பாக்யராஜ் பரபரப்பு அறிக்கை ]
தனது ராஜினா குறித்து நீண்ட கடிதம் ஒன்றை அவர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளார். அதை விளக்கி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கே.பாக்யராஜ். அப்போது தனது கடிதத்தை முழுமையாக வாசித்தார். பின்னர் அவர் கூறுகையில், நான் பதவியிலிருந்து விலகினாலும் கூட ஒரு எழுத்தாளனுக்குரிய அங்கீகாரத்தையும், உரிமையையும் வாங்கிக் கொடுக்க முடிந்தது. அதற்காக நான் மகிழச்சி அடைகிறேன் என்று கூறினார்.
தனது ராஜினாமா குறித்து அடுத்து வரும் ரியாக்ஷனைப் பொறுத்து தான் பதிலளிக்கப் போவதாகவும், இப்போதைக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் கூறி பேட்டியை முடித்துக் கொண்டார் கே. பாக்யராஜ்.
தமிழ்த் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவர் கே. பாக்யராஜ். அவருக்கு இந்த அளவுக்கு நெருக்கடி வந்து பதவியை விட்டு விரட்டியடிக்கும் அளவுக்கு அது போயிருப்பது திரையுலகை அதிர வைத்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications