சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக தலைவரா? இல்லை சாதி சங்க தலைவரா? எதை விரும்புகிறார் ஓபிஎஸ்?.. கே.சி.பழனிசாமி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: ஓ பன்னீர் செல்வம் அதிமுக தலைவராக விரும்புகிறாரா இல்லை சாதி சங்க தலைவராக விரும்புகிறாரா என முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றதும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கிவிட்டார். அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிகளை நீக்கிவிட்டு திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமாரை நியமித்துள்ளார்.

இடிக்குதே! எகிறி அடிக்கும் எடப்பாடி.. பதுங்கும் பன்னீர்! “புகாரை” நியாயப்படும் வகையில் அமைதியோ அமைதிஇடிக்குதே! எகிறி அடிக்கும் எடப்பாடி.. பதுங்கும் பன்னீர்! “புகாரை” நியாயப்படும் வகையில் அமைதியோ அமைதி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்ததும் அவரால் நடந்த நியமனங்களும் நீக்கங்களும் செல்லாது என்பதை நிரூபிக்க ஓபிஎஸ் ஒரு பக்கம் பாடுபட்டு வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமானவர்களுக்கே கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளதால் மற்றவர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

முக்குலத்தோர் சமூகம்

முக்குலத்தோர் சமூகம்

அதிலும் குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தினர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். இந்த நிலையில் முக்குலத்தோர் சமூகத்தினர், ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் கைகோர்த்து அதிமுகவை எடப்பாடி தரப்பிடம் இருந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக பல்வேறு தேவர் அமைப்புகளை சேர்ந்த 50 தலைவர்கள் ஓபிஎஸ்ஸுக்கும் சசிகலாவுக்கும் ரகசிய கடிதம் எழுதியுள்ளனராம்.

பொதுச் செயலாளர்

பொதுச் செயலாளர்

பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸும் கட்சியை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனராம். இவர்கள் கடிதம் எழுதி இருவாரங்களாகிவிட்டன. இந்த நிலையில் இந்த கடிதம் குறித்த செய்தி இடம்பெற்றுள்ள ஆங்கில நாளிதழின் கட்டிங்ஸை குறிப்பிட்டு முன்னாள் எம்பி கேசி பழனிசாமி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதிமுக தலைவர்

அதிமுக தலைவர்

அதில் அவர் அதிமுக தலைவராக விரும்புகிறாரா அல்லது சாதி சங்க தலைவராக விரும்புகிறாரா #OPS ? ஏற்கெனவே தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்திற்கு அதிமுகவின் சாதிய பிளவு வழிவகுக்கும். #MGR & அம்மா வழியில் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும் என அந்த ட்வீட்டில் குறிப்பிடடுள்ளார்.

English summary
Former ADMK MP K.C.Palanisamy asks whether OPS wants to become ADMK's chief or caste association's chief?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X