நெருங்கும் வடகிழக்கு பருவமழை.. 2015 சென்னை வெள்ளம் மீண்டும் ஏற்படுமா?.. அமைச்சர் பதில்!
சென்னை: 2015ல் ஏற்பட்டது போல சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Recommended Video
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது: 2015ல் ஏற்பட்டது போல சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாது. அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை நாங்கள் எடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய இடங்கள், தாழ்வான பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் துவங்கி டிசம்பர் மாதம் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.

மழை காலம்
அதற்கு ஏற்றவாறு தற்போது தமிழகத்தில் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து பட்டியலை தயாரித்து உள்ளோம். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன்
சென்னையை பொருத்தவரையில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்தார். மேலும் பேரிடர் காலத்தில் எடுக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்டம் வாரியான தொலைபேசி எண்களையும் வெளியிட்டார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகள்
தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய இடங்கள்,தாழ்வான பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2015-இல் ஏற்பட்டது போல சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாது. அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்தார்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு












Click it and Unblock the Notifications