எங்களையெல்லாம் சுட்டா யாரு இருக்கா கேட்க.. சட்டம் கூட இல்லையே.. நறுக்கென்று கேட்கும் காளியம்மாள்
வடசென்னையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
Recommended Video

சென்னை: "சிட்டுக்குருவியை சுட்டா அதை கேட்க சட்டம் இருக்கு.. ஆனா மீனவர்களை சுட்டால்.. எங்களுக்கு யாரு இருக்கா?" என்று சுருக்கென்றும், நறுக்கென்றும் கேள்வி கேட்கிறார் காளியம்மாள்!
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர்தான் காளியம்மாள். கட்சியில் இவர் சேர்ந்தது என்னமோ கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான்! ஆனால் 10 வருடங்களாகவே மீனவ மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார் காளியம்மாள்!
காளியம்மாளின் எளிமையான தோற்றமும், உறுதியான பேச்சும் மக்களை சீக்கிரமாக ஈர்த்து கொண்டு போய்விட்டது. சென்னை ராயபுரம் பனைமரத்தொட்டி பகுதியில் காளியம்மாள் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

நாம் தமிழர் கட்சி
அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது சொல்லும்போதுகூட, "தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மாற்றத்திற்கான கட்சியாகதான் நாம் தமிழர் கட்சி உள்ளது.
சிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா!

ஜனநாயகம்
மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து அதனை சரிசெய்யும் திட்டவரைகள் எங்களிடம் தயார் நிலையில் உள்ளது. நாங்கள் பணநாயகத்தை நம்பி தேர்தலில் நிக்கவில்லை. ஜனநாயகத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறோம்" என்றார்.

போராடுவேன்
காளியம்மாள் சொல்கிறார், "எம்பியாக சென்றால் பாராளுமன்றத்தில் மக்கள் உரிமைகளை கேட்டு பெறுவேன்.. இல்லையென்றால், அதே பாராளுமன்றத்தில் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராடுவேன்" என்கிறார். காளியம்மாளின் இந்த பேச்சுதான் பெரும்பாலான இளைஞர்களை ஈர்த்துள்ளது.

எளிமையான வேட்பாளர்
எப்படியும் மீனவ சமுதாய மக்களின் வாக்குகளை காளியம்மாள் நிச்சயம் பெறுவார் என்ற அளவுக்கு இவரது பிரச்சாரங்கள் அமைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு எந்தவித பின்புலமும் இல்லாமல் பிரச்சாரத்தில் கலக்கி வருகிறார் இந்த எளிமையான வேட்பாளர்!
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications