ராமதாசுக்கு எதிர்ப்பு.. காடுவெட்டி குருவின் சகோதரி.. வீரப்பனின் மனைவி த.வா.க- வில் ஐக்கியம்
Recommended Video

சென்னை: காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.
சென்னை அரும்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இருவரும் கட்சியில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பேசிய அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், நான் வாக்குறுதி தரமாட்டேன் என்றும் ஆனால் செய்ய வேண்டியதைச் செய்வேன் எனவும் தெரிவித்தார்.
இருவர் மீது இனியும் ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொள்வது தனது கடமை என்றும் பேசினார்.
மேலும், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை தனது சகோதரனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எதிராக ராமதாஸ் மற்றும் ஜிகே மணி ஆகியோர் இழைத்த அநீதிக்கு பாடம் புகட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார் என்றும் கூறினார்.
காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்திருப்பது, நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு வாக்குவங்கியை பாதிக்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமகவில் இருந்து நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications