கலைஞர் மகளிர் உரிமை தொகை வருது.. தென்மாவட்ட மக்களுக்கு ரூ.1,000 + 6,000 நிவாரணத்தொகை.. அரசாணை வந்தது
சென்னை: மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை புயல் புரட்டிபோட்டுவிட்ட சென்ற நிலையில், நிவாரண தொகையை அரசு அறிவித்து வழங்கியது..

அடுத்த சில தினங்களிலேயே தென் மாவட்டங்களில் இயற்கை சீற்றம் திசை திரும்பியது.. வரலாறு காணாத மழை வெள்ளத்தில் தென்மண்டலமே சூழ்ந்துவிட்டது. பலரும் வீடின்றி தவித்தனர்.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வெள்ள நிவாரணம்: தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.. இதில், நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்பை விட 68 சதவீதமும், நெல்லை 135 சதவீதமும், குமரியில் 103 சதவீதமும், தென்காசியில் 80 சதவீதமும் மழைப்பொழிவு பதிவாகியது..
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்..
அந்தவகையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது..
உதவித்தொகை: அதாவது, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 6,63,790 குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகையும், கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட 14,31,164 குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.. இந்நிலையில், இந்த நிவாரணத் தொகைக்காண அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது..
ஆலோசனை கூட்டம்: சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் . மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர், அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத்தொகை: இது ஒருபுறமிருக்க பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்படுவதால், வழக்கமாக வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்குமா? என்ற சந்தேகம் பரவலாக கிளம்பியது.. ஆனால், வேறு எந்த திட்டத்திற்காகவும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தாமதப்படுத்தப்படாது என்றும், இந்த திட்டத்திற்கான தொகை அரசால் தனியாக ஒதுக்கப்பட்டுவிட்டதால், இது தொடர்பான வீண் குழப்பம் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் மகளிர் உரிமைத் தொகை சற்று முன்கூட்டியே வழங்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருவது கூடுதல் மகிழ்ச்சியை பெண்களிடத்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications