மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக "சிறப்பு முகாம்.." இதையும் மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்காமல் தவற விட்டவர்களுக்காக நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மிகவும் கவனம் பெற்ற அறிவிப்பில் ஒன்று மாதம் தோறும் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம். திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.இதை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை விமர்சித்து வந்தது. ஒருபக்கம் மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இத்தகைய சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, இதனை பெற தகுதி வாய்ந்த பெண்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டது.
1.48 கோடி விண்ணப்பங்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபற்றது. இந்த விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது கட்ட முகாம், 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற்றன. இரண்டாவது கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக மொத்தம் 1.48 கோடி விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இரண்டு கட்ட முகாம்களும் முடிந்து விட்ட சூழலில், விடுபட்ட சிலர் இனி எப்படி விண்ணப்பிப்பது என கவலை அடைந்தனர்.
விடுபட்ட நபர்களுக்காக: இந்த நிலையில் தான் தமிழக அரசு அசத்தலான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இதுவரை விண்ணப்பிக்காத விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு முகாமில், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் , ஏற்கனவெ முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்ப தலைவிகள், 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு முகாம்கள்: இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் அமைப்பு சாரா நலவாரிய திட்டம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதிய திட்டம் பெறக்கூடிய குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் இல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தான் சிறப்பு முகாம்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
-
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications