Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது வேற வாய்.. மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் எடப்பாடியை விமர்சித்த கலாநிதி வீராசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியது, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்தது போன்ற நகர்வுகளால் திமுக களத்தில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. அன்றைக்கு ரூ.1,000 மகளிர் உரிமை தொகை வழங்குவதே சாத்தியமில்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, இப்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி 2,000 வழங்குவேன் என கூறுகிறார் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய கலாநிதி வீராசாமி எம்பி, "5,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை கொடுத்தது எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்கின்றனர். பிப்ரவரி, மார்ச்சில் அறிவிப்பு வெளியாகி ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கும். மே மாதம் முடிவுகள் வெளியாகும். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.

kalanidhi-veerasamy-dmk-mp-kalanidhi-veerasamy-slams-edappadi-palanisamy-over-magalir-urimai-thogai

அது வேற வாய்

மீண்டும் திமுக ஆட்சியமைந்தவுடன் ரூ.2,000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தலைவரும் சொல்லியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் சொல்லியிருக்கிறார். கடந்த 2021 தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கூறினோம். அப்போது அதிமுக ஆட்சியில் ரூ.1,000 மட்டுமே கொரோனா நிதி வழங்கினார்கள்.

நிதி இல்லை என்று எடப்பாடி பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கினோம். இப்போது நாங்கள் ரூ.5,000 கொடுத்துவிட்டோம். அன்றைக்கு எடப்பாடி மாத மாதம் ரூ.1,000 கொடுக்க முடியாது என்றவர், இப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000 கொடுப்பேன் என்று அதே வாயால் சொல்கிறார்.

வட சென்னை வளர்ச்சி திட்டம்

இதை செயல்படுத்தும் திறனும், ஆற்றலும் யாருக்கு இருக்கிறது, யார் ஆட்சிக்கு வந்தால் செய்வார்கள் என்பதை நாங்கள் நிரூபித்துவிட்டோம். கோடை கால சிறப்பு தொகையாக, மே மாதத்தில் ரூ.2,000 கொடுப்போம் என்பதை இப்போதே உறுதிபடுத்திவிட்டோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அது தொடரும்.

வட சென்னைக்காக திமுக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. வட சென்னை பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதி என்பதால், வட சென்னை வளர்ச்சி திட்டம் என்பதை அறிவித்து முதலமைச்சர் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உங்களின் தேவைகளை அறிந்து செயல்படுகிறார்.

மீண்டும் ஆட்சி

நம் குழந்தைகள் வளர்ந்து உயர்கல்வியில் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்பதற்காக தான் தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்டவை மூலம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறார். எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நல்லது செய்வேன் என்று சொல்லித்தான் தலைவர் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தார். அதை இப்போதும் செயல்படுத்து வருகிறார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்வார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+