வடசென்னை எம்பி யார்? கலாநிதி வீராசாமி VS ராயபுரம் மனோ.. தந்தி டிவி எக்ஸிட் போல் ரிசல்ட் இதுதான்
சென்னை: வடசென்னை லோக்சபா தொகுதியில் ஜெயிக்கப்போது யார்? என்பது பற்றி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. நேற்றுடன் 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தந்திடிவி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி நிலவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடசென்னை தொகுதிக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ், சீமானின் நாம் தமிழர் தமிழர் சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தான் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கலாநிதி வீராசாமி 40 சதவீத ஓட்டுகளை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அதிமுகவின் ராயபுரம் மனோ 32 சதவீத ஓட்டுகளையும், பாஜகவின் பால் கனகராஜ் 12 சதவீத ஓட்டுகளையும் பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வடசென்னையின் எம்பியாக மீண்டும் கலாநிதி வீராசாமி தேர்வாக வாய்ப்புள்ளதாக தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications