செல்போனும் ஸ்விட்ச் ஆஃப்..ஒரே பஸ்ஸில் 3 சீட்டுக்கு துண்டு! காளியம்மாளின் அடடே அரசியல்! அடுத்து என்ன?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் எந்த கட்சியில் சேரப் போகிறார் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் காளியம்மாள். எதற்கும் இருக்கட்டுமே என்று மூன்றாவது கட்சி ஒன்றிடமும் பேசியதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியில் தமிழகம் முழுவதும் அறிந்த முகங்களில் சிலர் மட்டுமே குறிப்பிடத்தக்கவர்கள். சீமானுக்கு அடுத்தபடியாக ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், சாட்டை துரைமுருகன், காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோர் இருந்தனர்.

இதில் ஏற்கனவே ராஜீவ் காந்தி திமுகவிலும், கல்யாணசுந்தரம் அதிமுகவிலும் தஞ்சம் புகுந்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. காளியம்மாளையும் சிவசங்கரையும் சீமான் தரக்குறைவாக பேசியிருந்தார்.
இதை அடுத்து காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாகவே யூகங்கள் வெளியாகி வந்தது. அதுவரை அமைதி காத்த காளியம்மாள் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். குறிப்பாக நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்ட பிறகு தான் அவரது விலகல் அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டார் காளியம்மாள். அவரது பிரச்சாரம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் ஓரளவு வாக்கு வங்கியும் கிடைத்தது. இந்த நிலையில் சீமான் உடனான மோதல் காரணமாக கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அவர் இடையே விஜய் கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைவார் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவுக்கு சென்ற ராஜீவ் காந்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்திய காளியம்மாள் திமுகவில் இணைய இருக்கிறார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் காளியம்மாள் விதித்த சில நிபந்தனைகளுக்கு திமுக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் செய்த சில வேலைகள் திமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்ததால் அவரிடம் கெஞ்ச வேண்டாம் அவராகவே ஒரு முடிவுக்கு வரட்டும் யாரும் பேச வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகளிடம் பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிவிட்டாராம்.
காரணம் காளியம்மன் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், முன்னாள் தம்பிகள் உதவியுடன் திமுக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் ராஜீவ் காந்தி மூலமாக அன்பில் மகேஷை நேரில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
மேலும் எதற்கும் இருக்கட்டும் என அதிமுக தரப்பிலும் துண்டு போட்டு வைக்கும் விதமாக கல்யாணசுந்தரம் மூலம் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த திமுக தரப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த காளியம்மாள் அந்த கட்சியில் சேர்ந்தால் பழைய வீடியோக்களை போட்டு நாம் தமிழர் கட்சியினர் விமர்சிப்பார்கள். எனவே அதிமுக அல்லது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்றும் காளியம்மாள் நினைக்கிறார்.
அதனால்தான் கட்சி பிரிவு அறிவிப்பு வந்திருந்தாலும் எந்த கட்சியில் சேரப் போகிறார் என்று அறிவிப்பு வரவில்லை. எல்லோரும் எதிர்பார்ப்பது போல திமுகவில் இணைவாரா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணைவாரா என்பது தான் தற்போதைய பேசு பொருளாக இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதற்கு விடை கிடைத்துவிடும் என்கின்றனர் முன்னாள் தம்பிகள்.
-
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications