சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த.. கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை
அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
சென்னை: சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு, பரபரப்பை ஏற்படுத்திய அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு... இவர் கோயில் அர்ச்சகர் சாமிநாதன் என்பவரது மகள் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.. முறைப்படி சவுந்தர்யா வீட்டில் பெண் கேட்டும் அவர்கள் மறுத்துள்ளனர்.. அதனால், காதலியை சாதி மறுப்பு திருமணமும் செய்து கொண்டார் பிரபு.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சவுந்தர்யாவின் அப்பா, இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை... அதனால் கல்யாணத்தன்று பெட்ரோலை உடம்பில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.. பிறகு கோர்ட்டுக்கு சென்று மகளை மீட்டுத் தரும்படி கேட்டார்.
ஆனால், பெண் மேஜர் என்பதாலும், அவரது முழு சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது என்பது உறுதியானதாலும், கணவருடனேயே சவுந்தர்யாவை சேர்த்து வைத்தது நீதிமன்றம்.. இப்படி சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது பிரபுவின் திருமண விவகாரம்.
பீகாரில் யார் வெற்றி பெற்றாலும்... அது வரலாற்று வெற்றிதான்... எப்படி எனக் கேட்கிறீர்களா..?
இந்நிலையில், பிரபுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.. தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.. தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, அக்கட்சியினருக்கும், பிரபுவின் ஆதரவாளர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.