ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்.. மதுவிலக்கு அமலாக்க ஏடிஜிபி, எஸ்பிக்கு காத்திருப்பு பட்டியல்! இதோ லிஸ்ட்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியான நிலையில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கள்ளச்சாராய பலியால் தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதாவது தமிழக அரசு கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் அலட்சியமாக செயல்பட்டுள்ளார். இதுதான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணத்தை ஏற்படுத்தி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழக அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியவர்கள் மீது அதிரடியாக ஆக்ஷன் பாய்ந்து வருகிறது. குறிப்பாக அமலாக்கப்பிரிவு மற்றும் மதுவிலக்கு போலீஸ் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. அதேவேளையில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதில் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை கீழ்பாக்கம் துணை காவல் ஆணையர் கோபி சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி செந்தில் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு சார்பில் முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராய மரணம் தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷ்ரவன் குமாருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கையை அரசு எடுத்தது.
அதோடு சமய் சிங் மீனாவுக்கு பதிலாக புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டார். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்தும், எஸ்பியாக ரஜத் சதுர்வேதியும் உடனடியாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றனர். இதுதவிர கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதன்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலை ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் உள்ளிட்டவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications