முன்னேற்றத்தில் கோட்டை.. கொரோனாவில் 8-ம் இடத்திலிருந்து 2வது இடத்தை எட்டி பிடித்த தமிழகம்.. கமல்
சென்னை: முன்னேற்றத்தில் முதலிடத்தில் இல்லாமல் கொரோனா பாதிப்பில் 8ஆவது இடத்தை தமிழகம் எட்டிப் பிடித்துவிட்டது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் 50 முதல் 150 வரை உயர்ந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு தற்போது நாளொன்றுக்கு தமிழகத்தில் 200 முதல் 600 வரை உள்ளது. இதனால் 9200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8ஆவது இடம்
நாளையோ நாளை மறுநாளோ 10 ஆயிரத்தை தாண்டிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பில் 2ஆவது இடம், 3ஆவது இடத்தில் தமிழகம் இருந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தமிழகம் 8ஆம் இடத்தில் இருந்தது.

2ஆவது இடம்
இப்போது மீண்டும் தொடர் பாதிப்புகளால் 8ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு சென்றுவிட்டது. முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. தமிழகத்தின் கொரோனா பாதிப்புக்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னேற்றம்
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.
கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.

டாஸ்மாக்
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு #தாங்குமாதமிழகம் என கமல்ஹாசன் கேட்டுள்ளார். கடந்த 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்ததால் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications